சென்னை ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர் கங்கை அமரன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்; அவர் கூறியதாவது: மோடியின் உத்தரவுப்படி நடக்கும் ஊழியனாக தொண்டனாகவருவதில் பெருமையடைகிறேன். தமிழகத்தில் என்னை பரிந்துரைசெய்த தமிழக பா.ஜ.க, நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
நாங்கள் ஏழை எளியகுடும்பத்தில் பிறந்தவர்கள் . சுத்தமான அரசியல் வாதிகள் மட்டுமே உள்ள பாஜ.,வில் இருப்பது பெருமைப்படுகிறேன். வேட்பாளரானதால் மக்கள் வாழ்த்துதெரிவித்து வருகிறார்கள். இது எனக்கு உற்சாகமாக உள்ளது. சட்ட சபையில் எனக்கு நாற்காலி ரெடியாகும் என்ற நம்பிக்கை உள்ளது. மாற்றத்தை கொண்டுவருபவர்கள் யார் என்பதை மக்கள் உணர்ந்து கொண்டுள்ளனர். மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் .
இதற்கு பிள்ளையார்சுழி போட்ட மோடி, அமித்ஷா, பொன். ராதாகிருஷ்ணன் , தமிழிசைக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். நல்லது நடக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ... |
குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ... |
சங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் 20 ... |
Leave a Reply
You must be logged in to post a comment.