இந்தியாவிலேயே மிகநீளமான சுரங்க பாதையை வரும் ஏப்ரல் 2-ம் தேதி பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப் பணிக்கிறார்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கட்டப் பட்டுள்ள இந்தியாவிலேயே மிகநீளமான சுரங்க பாதையை வரும் ஏப்ரல் 2-ம் தேதி பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப் பணிக்கிறார்.

ஜம்மு – நகர் தேசியநெடுஞ்சாலையில் 286 கி.மீ. தூரத்துக்கு நான்கு வழிப்பாதை அமைக்கும் பணி கடந்த 2011-ம் ஆண்டு மே மாதம் 23-ம் தேதி தொடங்கியது. இந்தத்திட்டத்துக்கு ரூ.3,720 கோடி செலவிடப்பட்டுள்ளது. இந்த நான்கு வழிச் சாலைபணிகள் முடியும் தருவாயில் உள்ளன. இந்த சாலையின் ஒருபகுதியாக நாட்டிலேயே மிக நீளமான சுரங்கப்பாதை கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த சுரங்கப்பாதையால் ஜம்முவுக்கும் நகருக்கும் இடையில் 30 கி.மீ. தூரம் குறையும். மொத்தம் 9.2 கி.மீ. நீளத்துக்கு இரு வழி சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிரதமர் அலுவலக இணை அமைச்சர் ஜிதேந்திரசிங் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘காஷ்மீர் மாநிலத்தில் செனானி நஷ்ரி இடையே கட்டப்பட்டுள்ள சுரங்கப்பாதையை ஏப்ரல் 2-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார்’’ என்றார். அன்றையதினம் நடக்கும் பொதுக்கூட்டத்திலும் மோடி உரையாற்றுகிறார்.

இந்த சுரங்கப்பாதை 1200 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. சுரங்கப்பாதையில் காற்றோட்டம், தீதடுப்பு, சிக்னல்கள், தகவல்தொடர்பு மற்றும் மின் சாதனங்கள் அனைத்தும் தானாக இயங்கும்வகையில் இந்தியாவிலேயே முதலாவதாக உலகத் தரத்துடன் கட்டப்பட்டுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கர்ப்ப காலத்தில் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மருத்துவரைப் பார்ப்பது நல்லது?

முதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை அணுகி சிசுவின் ...

காதில் வரும் நோய்கள்

காதில் என்ன நோய் வந்துவிடப் போகிறது என்று யாரும் நினைக்க வேண்டாம். வாய் ...

இளநீரின் மருத்துவ குணம்

காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ...