ராமர் கோவிலுக்காக ஜெயிலுக்குப் போகவும் தூக்கில்தொங்கவும் தயார்

ராமர் கோவிலுக்காக ஜெயிலுக்குப் போகவும் தூக்கில்தொங்கவும் தயாராக இருப்பதாக மத்திய நீர்வளத் துறை அமைச்சர் உமாபாரதி தெரிவித்துள்ளார். தன்னை பொறுத்த வரை அது ஒரு நம்பிக்கைசார்ந்த பிரச்சனை என்றும் உமா பாரதி கூறினார்.

மத்திய நீர்வளத் துறை அமைச்சர் உமாபாரதி நேற்று உத்தரப் பிரதேசத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ராமர்கோவில் என்பது என்னை பொறுத்த வரை நம்பிக்கைக் குரிய விஷயம். அதற்காக நான் மகத்தான பெருமைகொள்கிறேன் என்றார்.

ராமர் கோவில் கட்டுவது குறித்து முதல்வர் ஆதித்ய நாத் உடன் பேசினீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர் உமா பாரதி, நாங்கள் ராமர் கோவில் கட்டுவது குறித்த பேசத் தேவையில்லை இந்தப் பிரச்சனையில் நாங்கள் ஒன்றும் மாற்றுமக்கள் கிடையாது. முதல்வர் ஆதித்யநாத்தின் குரு மகந்த் அவைத்நாத் கோவில் தொடர்பான பணிகளுக்கு தலைவர் என்றும் கூறினார்.
 
ராமர் கோவிலுக்காக நான் ஜெயிலுக்குபோக வேண்டுமானாலும் போவேன். தூக்கில் தொங்க வேண்டுமானாலும் தொங்கதயாராக இருக்கிறேன் . இந்த பிரச்சினையில் பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண்பதா அல்லது பிற வழிகளில் தீர்வு காண்பதா என்பதை கோர்ட்டுதான் தீர்மானிக்கவேண்டும் .
 
அதேநேரத்தில் உச்சநீதிமன்றம் இப்பிரச்சனையை வெளியில்பேசி தீர்க்க அறிவுறுத்தியிருப்பதையும் செய்தியாளர்களிடம் பேசும்போது உமாபாரதி சுட்டிக்காட்டினார்.  ராமர்கோவில் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளதால் இதனை அதிகம்பேச உமாபாரதி மறுப்பு தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

விளையாட்டு வீரர்களுக்கான உணவு முறைகள்

விளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் மேற்கூறியபடி பல்வேறு ...

கருத்தரித்த முதல் 3 மாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது ?

கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ...

சங்கிலையின் மருத்துவக் குணம்

சங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் 20 ...