அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும்

அயோத்தியில் ராமர்கோயில் கட்டுவதற்காக என் உயிரைக் கூட கொடுப்பதற்கு தயாராக இருக்கிறேன் என்று மத்திய அமைச்சர் உமாபாரதி நேற்று தெரிவித்துள்ளார்.

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றச்சாட்டில்இருந்து விடுவிக்கப்பட்டு இருந்த பா.ஜனதா மூத்த தலைவர் எல்கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி ஆகியோரிடம் மீண்டும் விசாரணை நடத்த சி.பி.ஐ.க்கு உச்சநீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியது.

இதையடுத்து, டெல்லியில் நிருபர்களுக்கு மத்திய அமைச்சர் உமாபாரதி நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது-

அயோத்தியில் ராமர்கோயில் கட்டுவது என்பது எனது கனவு. அயோத்தில் ராமர்கோயில் கட்டுவதற்காக சிறை செல்லவும், தூக்கில் தொங்கவும் நான்தயார். இன்று இரவு நான் அயோத்தி சென்று ராமர்கோயிலில் ஆசிபெற இருக்கிறேன்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் விவகாரத்தில் எனதுபெயர், பங்கு இருக்கிறது என்பதை நான் பெருமையாக நினைக்கிறேன், இதற்காக நான் யாரிடமும் மன்னிப்பு கோரப்போவதில்லை. ராமர்கோயில் கட்டுவதற்காக நான் தொடர்ந்து போராடுவேன். இதற்காக எத்தகைய தண்டனைகள் அளித்தாலும் அதை எதிர்கொள்ளத்தயார்.

என் மீது சதித் திட்டம் தீட்டியதாக வழக்கு இருக்கிறது. இந்த குற்றச்சாட்டை நான்மறுக்கிறேன். நான் எந்த சதித்திட்டமும் தீட்டவில்லை. அனைத்தையும் நான் வெளிப்படையாகவே செய்தேன். ராமர்கோயில் கட்டும் பிரசாரத்தை நான் பெருமையாக, நம்பிக்கையுடன்தான் செய்தேன். தேசியக்கொடியின் நலனுக்காக நான் எனது முதல்வர் பதவியை துறந்தவள் என்பது உங்களுக்குதெரியுமா.

ராமர்கோயில் கட்டுவதற்காக என்னால் என்ன முடியுமோ அதை நான்செய்வேன். அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும். இதை தடுப்பதற்கான சக்தி யாருக்கும் இல்லை.  சீக்கியர்களுக்கு எதிரானபோராட்டம் நடக்கும் போது சோனியாகாந்தி ராஜீவ்காந்தி இல்லத்தில் இருந்தார். அதற்காக சீக்கியர் போராட்டத்தில் சதித்திட்டம் தீட்டினார் என்பதாக இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஊமத்தை இலையின் மருத்துவ குணம்

அகன்ற இலைகளையும், புனல் போன்ற நீண்ட மலர்களையும், முள் நிறைந்த காயையும் உடைய ...

மூலநோய் குணமாக

தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ...

முட்டைகளின் மருத்துவக் குணம்

கோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் வேகவைத்தால் கெட்டியாய்விடும்; ...