பாதுகாப்புப்படை வீரரைக் கட்டியணைத்து வாழ்த்திய ராஜ்நாத் சிங்

கோத்ராஜ் மீனா என்பவர், மத்திய பாதுகாப்புப்படை வீரராக இருந்துவருகிறார். 2014 ஆம் ஆண்டு, காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் பலத்தகாயமடைந்தார். அந்தச் சண்டையின்போது, அவர் கடுமையாகப் பாதிக்கப்பட்டார். கழுத்தில் ஒருகுண்டு பாய்ந்தது. அதனால், அவருக்கு சரியாகப் பேசமுடியாத நிலை ஏற்பட்டது. மேலும், சரியாக நடக்கமுடியாமலும் போனது.

85 சதவிகித அளவு பாதிக்கப்பட்ட நிலையில் இருந்துவருகிறார். நேற்று, மீனா உள்பட நான்கு பாதுகாப்புப்படை வீரர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், வீரப் பதங்கங்களை வழங்கினார். அப்போது, விருது வாங்குவதற்கு நொண்டியபடியே மீனா மேடைக்கு ஏறிவந்தார். மீனாவின் மார்புப்பகுதியில் விருதைக் குத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங், 'ப்ரோட்டாக்காலை' மீறி பாதுகாப்புப்படை வீரரைக் கட்டியணைத்தார். அதன்பின்னர் பேசிய ராஜ்நாத் சிங், 'பாதுகாப்புப்படை வீரர் கோத்ராஜ் மீனாவின் வீரத்தை நினைத்தும், மன உறுதியை நினைத்தும் பெருமைப்படுவதாகத் தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தியானத்துக்குரிய ஆசனங்கள்

பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ...

ஆரைக்கீரை தரும் மருத்துவக் குணங்கள்

நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ...

சர்க்கரை வியாதி

சர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு "இன்சுலின்" சுரப்பதாலோ அல்லது போதுமான இன்சுலின் ...