மண்டபம் பகுதியையும், பாம்பனையும் இணைக்கும்வகையில், மேலும் ஒரு சாலைப் பாலம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் மண்டபம் பகுதியையும், பாம்பனையும் இணைக்கும்வகையில், மேலும் ஒரு சாலைப் பாலம் அமைக்கப்படும் என, மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


ராமேசுவரம் பேக்கரும்பில் உள்ள அப்துல் கலாம் நினைவு மண்டபத் திறப்பு விழா தொடர்பான கட்டுமானப் பணிகளை, வெள்ளிக்கிழமை மத்திய அமைச்சர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், நிர்மலா சீதாராமன் ஆகியோர் நேரில் ஆய்வுசெய்தனர். இவர்களுக்கு பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழக (டிஆர்டிஓ) விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் மணிமண்டபத்தின் சிறப்புகள் குறித்து விளக்கம் அளித்தனர்.


இதுகுறித்து பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்ததாவது: அப்துல் கலாம் மணிமண்டபம் கட்டிமுடிக்கப்பட்டு விட்டது. கலாமின் 2 ஆவது நினைவு தினமான ஜூலை 27 ஆம் தேதி, பிரதமர் நரேந்திரமோடி மணிமண்டபத்தை திறந்து வைக்கிறார்.


இந்த விழாவில், நாடு முழுவதுமிருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பர் என எதிர்பார்க்கிறோம். இந்த திறப்பு விழா நாட்டில் மிகப்பெரிய எழுச்சியைஉருவாக்கும்.ராமநாதபுரத்திலிருந்து ராமேசுவரம் வரையிலான சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட உள்ளது. மேலும், ராமநாதபுரம் மாவட்டத்தில் மண்டபத்தையும், பாம்பனையும் இணைக்கும்வகையில், மேலும் ஒரு சாலைப்பாலம் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஆய்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன.


ராமேசுவரம் தீவில் உள்ள முகுந்தராயர் சத்திரத்திலிருந்து தனுஷ் கோடி வரையிலான சாலைப் பணிகள் இன்னும் முடிவடையவில்லை. இச்சாலையில் தகுந்தபாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்ட பின்னர் திறந்துவைக்கப்படும்.
கலாம் மணிமண்டபம் ராமேசுவரம் வரும் சுற்றுலாப்பயணிகள் உள்ளிட்ட பொதுமக்களும் பார்வையிட்டு வழிபாடு செய்யும் இடமாக அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பேரீச்சம் பழத்தின் மருத்துவ குணம்

இயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் , சில ...

அவக்கேடோவின் மருத்துவக் குணம்

ஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் அறியப்படும். இப்பழம் ...

இலவங்கப் பத்திரி மூலம் நாம் பெறும் மருத்துவம்

இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ...