காங்கிரஸ் 2.5 லட்சம்கோடியை வீணடித்திருக்கிறது நிதின் கட்கரி

உத்தரப்பிரதேச தலைநகர் லக்னெளவில் பாரதிய ஜனதாவை சேர்ந்த மேயர்கள் பங்கேற்ற மாநாடு நடைபெற்றது, இதில் உரையாற்றிய பாஜக தலைவர் நிதின் கட்கரி பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைமை தி,மு,கவிடம் சரண்அடைந்து விட்டனர் என குற்றஞ்சாட்டி உள்ளார்,

எந்த வகையில் 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய் வேண்டும் என்பதை தீர்மானிக்க மத்தியஅமைச்சர்கள் சிலர் அடங்கிய தனி குழுவை பிரதமர் மன்மோகன் சிங் ஆரம்பத்தில் ஏற்படுத்தி இருந்தார். அந்த குழு தேவைஅல்ல துறையினுடைய அமைச்சரே முடிவு செய்வார் என தோழமை கட்சியான தி.மு.க வற்புறுத்தியதை ஏற்று கொண்டு 2006லேயே அத்துறை சம்பந்தபட்ட உரிமைகலை அமைச்சருக்கு விட்டு கொடுத்தார் பிரதமர்.

நடந்துள்ள முறைகேட்டில் பிரதமர் மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர தங்களுக்கு பங்கு இல்லை என ஒதுங்க முடியாது. ஒதுக்கீடு எப்படி நடந்தது, அதில்பலன் பெற்றார்கள் யார் என்பது எல்லாம் காங்கிரஸ் தலைமைக்கும் பிரதமருக்கும் நன்றாக தெரிந்தே இருந்தது

2 ஜி ஒதுக்கீட்டை முறையாக ஏல முறையில் விற்றிருந்தால் அரசுக்குச் சுமார் 1,76,000 கோடி கிடைத்திருக்கும் தில்லியில் நடந்துமுடிந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளுக்கு செய்தஏற்பாடுகளில ஒன்னுக்கு மூணுமடங்கு விலை பேசப்பட்டு பொருள்கள் வாங்க பட்டுள்ளன. இந்த-வகையில் அரசுகு சுமார் ஒரு லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக மதிப்பிட பட்டிருக்கிறது. இந்த இருஊழல்களிலும் சேர்த்து மொத்தம் 2.5 லட்சம்கோடி வீணடித்திருக்கிறது ஐக்கியமுற்போக்கு கூட்டணி அரசு. இவையெல்லாம் எனக்குத் தெரியாமல் நடந்தவை, இதற்கு நான் பொறுப்பேற்க முடியாது என்று பிரதமர் மன்மோகன் சிங்கால் எப்படிக் கூற முடியும்?

உத்தரப்பிரதேசத்தில் பாஜக வலுப்படுத்த தனித்திட்டம் வகுத்திருக்கிறோம். 2025ல் மாநிலத்தில் பாஜக செல்வாக்கு உள்ள கட்சியாக ஆட்சிநடத்தும் அளவுக்கு கட்சியை வலுப்படுத்துவோம்.பிகாரில் நிதிஷ்குமார் தலைமையில் “தேசியஜனநாயக முன்னணி பெரும்பான்மை இடங்களை பெற்று மீண்டும் ஆட்சிக்கு வரும்”.பாஜக எதிர்கால அரசியல் வளர்ச்சி திட்டங்களை மையமாக வைத்தேஇருக்கும். எங்களுடைய கட்சியின் திட்டங்களிலும் கொள்கைகளிலும் வளர்ச்சிக்கே முக்கியத்துவம் தருவோம்’ என்றார் நிதின் கட்கரி.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பேரீச்சையின் மருத்துவக் குணம்

பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ...

ஓமம் ஒப்பற்ற ஒரு மருந்தாகும்

குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ...

விளையாட்டு வீரர்களுக்கான உணவு முறைகள்

விளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் மேற்கூறியபடி பல்வேறு ...