அமித்ஷா வருகை தமிழக அரசியலில் திருப்பு முனையை ஏற்படுத்தும்

"பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா விரைவில் தமிழகம் வர உள்ளார். அவரது வருகை தமிழக அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தும்' என்று மத்திய நெடுஞ்சாலை மற்றும் கப்பல்போக்குவரத்துத்  துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.


இது தொடர்பாக புதுதில்லியில் செய்தியாளர்களுக்கு அவர் புதன்கிழமை அளித்த பேட்டி: திருக்குறளுக்கு மத்திய அரசு அளித்த முக்கியத்துவம் உள்ளிட்ட, தமிழக நலன்சார்ந்த பல நடவடிக்கைகள் மூலம் பாஜக மீது தமிழக மக்களிடம்  மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பாஜகவில் தங்களை  இணைத்துக்கொள்ள தொடர்ந்து முன் வருகின்றனர். பாஜக தேசியத்  தலைவர் அமித்ஷா வரும் 22,  23,  24-ஆம் தேதிகளில் தமிழகம்வர உள்ளார்.  அவரது வருகையின்போது பல்வேறு கட்சிகளின் முக்கியத்தலைவர்கள் பாஜகவில் இணைய உள்ளனர்.  சென்னை, கோவை உள்ளிட்ட இடங்களில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.  அவரது வருகை தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தையும்,  தமிழக அரசியலில் திருப்பு முனையயும்  ஏற்படுத்தும்.  தமிழகத்தில் பாஜக மாபெரும் சக்தியாக உருவெடுக்கும் வாய்ப்புகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.


தமிழகத்தில் மத்திய அரசு கொண்டுவரும் திட்டங்களை தமிழக  அரசியல் கட்சிகள் எதிர்த்துவருகின்றன.  தமிழக மக்கள் விரும்பாத எந்தத் திட்டத்தையும் மத்திய அரசு செயல்படுத்தாது.  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில்  மாநில நலன்கள்சார்ந்து மத்திய அரசு செயல்படும்.  ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்ப்பதற்கு முன் அதுபற்றி முழுமையாக ஆய்வுசெய்வதுஅவசியமாகும்.  இத்திட்டத்தை ஆந்திரம்,  மகாராஷ்டிரம்,  ஒடிசா ஆகிய மாநிலங்கள் எதிர்க்கவில்லை. நெடுவாசல் பிரச்னை முடிந்துபோன ஒன்றாகும்.
காவிரி விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸ் அரசு தமிழகத்துக்கு எதிராக செயல்படுகிறது என்றார் பொன்.ராதாகிருஷ்ணன். பேட்டியின் போது,  தமிழகமேலிடப் பொறுப்பாளர் முரளிதர் ராவ் உடனிருந்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கல்யாண முருங்கை

முள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் கொண்ட மென்மையான ...

இரத்த அழுத்த நோய்

கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ...

அதிக சப்தத்துடன் குறட்டை ஆரோக்கியத்துக்கு கேடு

அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ...