நீட் தேர்வில் ஓராண்டுக்கு விலக்கு அளிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்

நீட் நுழைவுத்தேர்வில் ஓராண்டுக்கு விலக்களிக்க வாய்ப்பு அதிகம் உள்ளது என்றார் மத்திய கப்பல், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறைஅமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.


திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற பாஜக}வின் மக்களவைத் தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பங்கேற்க வந்த செய்தியாளர்களுக்கு அளித்தபேட்டி:
தமிழக பள்ளிகளில் தகுதி நிறைந்த படிப்பு கற்பிக்கப்படாததால், நீட்தேர்வில் பிற மாநிலத்தவருடன் போட்டியிட முடியாத நிலை உள்ளது. நீட் நுழைவுத் தேர்வுக்கு கால அவகாசம்தேவை என்று தமிழக அரசு வைத்துள்ள கோரிக்கையை கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் இந்த விஷயத்தில் ஓராண்டுகாலத்துக்கு விலக்கு கொடுத்தாலும் தவறில்லை என்ற கருத்தும் நிலவுகிறது.


கிராமப்புற மாணவர்களுக்கும் மருத்துவப்படிப்பில் வாய்ப்பு தரவேண்டும் என்று மத்திய அரசு நினைக்கிறது. எனவே நீட் தேர்வில் ஓராண்டுக்கு விலக்கு அளிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. விரைவில் இதில் நல்ல முடிவுவரும் என்ற நம்பிக்கை உள்ளது. அதிமுக அணிகள் இணைந்தால் கட்சிக்கு நல்லது. ஆனால், அந்த கட்சியின்பிளவுகள் ஆட்சியைப் பாதிக்கக்கூடாது. ஒன்றுபட்ட சக்தியாக அரசு இருக்கவேண்டும் என்பதே எங்கள் விருப்பமாகும்.


மதிமுக பொதுச்செயலர் வைகோ தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து பின்னர் வெளியேசென்றார். அதன் பின்னர் மத்திய அரசைத் தொடர்ந்து விமர்சித்துவருகிறார். அரசியல் ரீதியாக சில விஷயங்களை விமர்சனம் செய்கின்றனர். அவை அனைத்தும் தவறு என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சியை யாராலும் தடுத்து நிறுத்தமுடியாது. பாஜக. ஆட்சிக்கு வரும் காலம் நெருங்கி கொண்டுள்ளது.
சென்னையில் சிவாஜி சிலையை அவரது குடும்பத்தினரோ, தனிநபர்களோ வைக்கவில்லை. தமிழக அரசுதான் வைத்தது. எனவே, அவரது சிலையை அகற்றியதற்காக பேரவையைக்கூட்டி மன்னிப்பு கேட்க வேண்டும். உலகம் போற்றும் கலைஞனை பெற்ற தமிழகமே அவமானப்படுத்துவது பெரும்தலைகுனிவாகும் என்றார் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.

 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

குடிமயக்கம் தெளிய

குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ...

கரிசலாங்கண்ணி இலையின் மருத்துவக் குணம்

கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது.

அரத்தையின் மருத்துவக் குணம்

இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ...