மற்றொரு கட்சியின் பலத்தையோ பலவீனத்தையோ பார்த்து நாங்கள் எங்கள் கட்சியை பலப்படுத்தவில்லை

திமுக அணிகள் இணைப்பிற்கும் அமித்ஷா வருகைக்கும் எந்தத்தொடர்பும் இல்லை என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தர ராஜன் கூறியுள்ளார்.

சென்னையில் பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் மாநிலதலைவர் தமிழிசை சௌந்தர ராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியவிவரங்கள் : அவரவர் கட்சியில் சில நடவடிக்கைகள் நடந்து வருகிறது. அதற்கும் எங்களுக்கும் எந்தசம்பந்தமும் இல்லை. மற்றொரு கட்சியின் பலத்தையோ பலவீனத்தையோ பார்த்து நாங்கள் எங்கள் கட்சியை பலப்படுத்தவில்லை.

தமிழகத்தில் பாஜகவை பலப்படுத்தவே கட்சிரீதியிலான நடவடிக்கையாக தேசியத்தலைவர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அமித்ஷா வருகை அரசியல்மாற்றத்தை ஏற்படுத்தும், பாஜகவின் அடிப்படை கட்டமைப்பை மாற்றவே அவர்வருகிறார். இணைப்பு அதிமுகவிற்குள் நடக்கிறது, ஒருகட்சியின் இணைப்பு வேறு கட்சித் தலைவர் வருகைக்கும் என்ன தொடர்பு இருக்கமுடியும்.

ஜெயலலிதா மரணம் குறித்து தொடக்கம் முதலே மிகப் பெரிய சந்தேகம் உள்ளது. ஏனெனில் ஜெயலலிதா மருத்துவ மனையில் அனுமதிக்கப் படுவதற்கு முன்னர் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கிறார். சிறப்பான முறையில் செயல் பட்டிருக்கிறார் அவரது மரணத்தில் இருக்கும் சந்தேகங்களை போக்க நீதிவிசாரணை நடத்த அரசு முன்வந்திருப்பது சரியான முடிவே.

ஜெயலலிதாவின் சரித்திரத்தில் போயஸ்கார்டன் இல்லம் இல்லாமல் எழுதமுடியாது. 50 ஆண்டுகாலம் அவர் வாழ்ந்த போயஸ்கார்டன் வீட்டை நினைவு இல்லமாக மாற்றுவது சரியானமுடிவே. ஆளுங்கட்சி பிரிவால் மாநிலத்தின் வளர்ச்சி பாதிக்கப்படக்கூடாது. நாங்கள் யாரையும் பகடைக் காய்களாக உருட்ட வில்லை என்றும் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.
 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மக்கள் ‘கொடூர அரசாங்கத்தை’ � ...

மக்கள் ‘கொடூர அரசாங்கத்தை’ விரும்பவில்லை வன்முறைச் சம்பவங்கள், பெண்களுக்கு எதிரான கொடுமைகள், வேலை வாய்ப்பின்மை, ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை எ ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக � ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக பாஜக நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் விளக்கம் “மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுந ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பீகார் பயணம் இந்தியா- நேபாளம் எல்லையில் பீகார் பகுதியில் இந்திய வான் ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற� ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதம� ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதமர் மோடி வழங்கிய தகவல்களும் அறிவுரை முக்கியமான ஒரு ஆய்வு சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி ...

மருத்துவ செய்திகள்

ஆளிவிரையின் மருத்துவக் குணம்

இதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ...

கருஞ்செம்பையின் மருத்துவ குணம்

கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ...

சித்த மருத்துவம்

சித்தர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி, தேசம் என்ற பாகுபாடு இல்லை. அகத்தியர், ...