ஓபிசி பிரிவினருக்கான வருமான உச்சவரம்பான கிரிமிலேயரை, 6 லட்ச ரூபாயில் இருந்து 8 லட்ச ரூபாயாக உயர்த்த, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதுதொடர்பாக டெல்லியில் செய்தியா ளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி, கிரிமி லேயர் உயர்த்தப் பட்டதன் மூலம், ஆண்டுக்கு 8 லட்சம் ரூபாய்வரை வருமானம் பெறுவோர் இடஒதுக்கீட்டு பலன்களை பெற முடியும் என்றார்.
மேலும் ஓபிசி பிரிவின் கீழ் வரும் அனைத்து சமூகத்தினரும் இட ஒதுக்கீட்டு பலன்களை பெறும் வகையில், ஓபிசி பிரிவில் 3 உட்பிரிவுகளை கொண்டுவருவது குறித்து, மத்திய அரசு பரீசிலித்து வருவதாகவும் அவர்குறிப்பிட்டார்.
இதுகுறித்து ஆராய ஆணையம் அமைக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதாகவும் அருண் ஜெட்லி மேலும் தெரிவித்தார்.
இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ... |
உணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, ... |
மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.