நேரடி மானியத்திட்டத்தின் மூலம் மத்திய அரசு ரூ.57,000 கோடியை சேமித்துள்ளது

நேரடி மானியத்திட்டத்தின் (டிபிடி) மூலம் மத்திய அரசு ரூ.57,000 கோடியை சேமித்துள்ளது என்று மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் மத்திய அரசு செயல்படுத்தும் 84 மானியத் திட்டத்தின் மூலம் 33 கோடிபேர் பயனடைந்ததாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஹரியாணாவில் நடந்த டிஜிட்டல் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய ரவி சங்கர் பிரசாத் மேலும் கூறியதாவது: பல்வேறு அரசு திட்டங்களை நேரடி மானியத் திட்டத்தின் மூலம் வழங்கியதால் மத்திய அரசு ரூ.57,000 கோடியை சேமித்துள்ளது. நேரடி மானியத்திட்டம் அறிமுகப்படுத்துவதற்கு முன்னால் இடைத் தரகர்கள் இந்த பணத்தை தங்களது பைகளுக்குள் போட்டுவந்தனர். தற்போது அது கட்டுப்படுத்தப் பட்டுள்ளது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் நேரடி மானியத்திட்டத்தோடு இணைக்கப்பட்டது. இதனால் பயனாளிகளின் வங்கிகணக்குக்கு பணம்சென்றது. ஆதார் எண்ணை டிரைவிங் லைசென்ஸோடு இணைப்பதற்கு மொழியப்பட்டுள்ளது. இதன்மூலம் பல லைசென்ஸ்கள் விநியோகிப்பதையும் பயன்படுத்துவதையும் தடுக்கமுடியும்.

ஆதார்கார்டு மிக பாதுகாப்பானது. அதில் கண்ணின் கருவிழி மற்றும் கைரேகைகள் பதியப்பட்டுள்ளன. என்னுடைய ஆதார் கார்டை நீங்கள் பார்த்தால், என் பெயர், என் பாலினம் ஆகியவை முன்பகுதியில் இருக்கும். பின்பக்கம் பார்த்தால் என்னுடைய நிரந்தரமுகவரி இருக்கும். என்னுடைய மதம், என்னுடைய பெற்றோர், கல்வி தகுதி, வருமானம் ஆகியவை இருக்காது. உங்களின் வேறு எந்த தகவலும் ஆதார்கார்டில் இருக்காது.

 

இந்தியாவில் வளர்ந்து வரும் டிஜிட்டல் பொருளாதாரத்தால் 2020-ம் ஆண்டுக்குள் 50 முதல் 70 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும். மத்திய அரசு நாட்டை வளர்ச்சிபாதையில் அழைத்துச் செல்வதில் உறுதியாக இருக்கிறது. அதேநேரத்தில் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியில் மத்திய அரசு கவனமாக இருந்துவருகிறது. அனைத்து வாய்ப்புகளும் எல்லோருக்கும் போய் சேரவேண்டும் என்பதில் மத்திய அரசு தெளிவாக இருக்கிறது.

ஹரியாணாவில் முதன்முதலாக சைபர் பாதுகாப்பு கொள்கையை கொண்டுவந்ததற்கு நான் பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன். எலெக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்திமையமாக ஹரியாணா மாநிலம் உருவாவதற்கு அனைத்து ஆற்றல்களும் உள்ளன. ஹரியாணாவில் உள்ள கிராமங்களை டிஜிட்டல் கிராமங்களாக அரசுடன் சேர்ந்து மாற்றுவதற்கு தொழில் முனைவோர்கள் முன்வர வேண்டும். இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

மருத்துவ செய்திகள்

அதிக சப்தத்துடன் குறட்டை ஆரோக்கியத்துக்கு கேடு

அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ...

கர்ப்பிணிகளுக்கு DHA கூடிய பால் மாவு அவசியமா?

அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ...

மலச்சிக்கல் நீங்க உணவு முறைகள்

புரோட்டீன் தினமும் இவர்கள் ஒரு கிலோ எடைக்கு 1கிராம் வீதம் புரோட்டீன் உணவைச் சாப்பிடலாம்.