ஜிதேந்திரசிங் தத்தெடுத்த கிராமம், திறந்தவெளியில், இயற்கை உபாதைகள் கழிக்காதபகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளது

காஷ்மீரில், மத்திய அமைச்சர், ஜிதேந்திரசிங் தத்தெடுத்த கிராமம், திறந்தவெளியில், இயற்கை உபாதைகள் கழிக்காதபகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஜம்மு – காஷ்மீரில், முதல்வர் மெஹபூபா முப்தி தலைமையில், மக்கள் ஜனநாயக கட்சி – பா.ஜ., கூட்டணிஆட்சி நடக்கிறது. எம்.பி.,க்கள், தங்கள் சொந்ததொகுதியில், ஒருகிராமத்தை தத்தெடுத்து, முன்மாதிரி கிராமமாக மாற்றும், 'சன்சத் ஆதர்ஷ்கிராம்' திட்டத்தை, 2014ல், பிரதமர் மோடி துவங்கினார்.

இதன்படி, ஜம்மு – காஷ்மீரில்தான், எம்.பி.,யாக தேர்வுசெய்யப்பட்ட, உதாம்பூர் தொகுதிக்கு உட்பட்ட, அம்பாலா கிராமத்தை, மத்திய இணை அமைச்சர், ஜிதேந்திரசிங் தத்தெடுத்தார்.அங்கு, மத்திய, மாநில அரசு துறைகளின் சார்பில், பல்வேறுதிட்டங்கள், வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதுகுறித்து, ஜிதேந்திர சிங் கூறியதாவது: அம்பாலா கிராமம், திறந்தவெளியில், இயற்கை உபாதைகள் கழிக்காத பகுதியாக அறிவிக்கப் படுகிறது. அம்பாலா கிராமத்தில் வங்கி, ஏ.டி.எம்., மையம், பொதுசுகாதார மையம், மேல்நிலைப் பள்ளி, விளையாட்டு மைதானம், ஆம்புலன்ஸ் வசதி ஆகியவை ஏற்படுத்தப்படும். இதேபோல், திறந்தவெளியில், இயற்கை உபாதைகள் கழிக்காத மாநிலம் என்ற சாதனையை, ஜம்முகாஷ்மீர் விரைவில் படைக்கும்.

தேவிகாநதியை துாய்மைப்படுத்துவது; 3,500 கோடி ரூபாயில், சட்டர்லேகா சுரங்கப்பாதை; உதம்பூரில் உயிர் தொழில்நுட்ப பூங்கா அமைப்பது உள்ளிட்ட திட்டங்களை, பிரதமர் மோடி வழங்கிஉள்ளார். மாநிலமக்கள், மத்திய அரசுக்கு, மிகுந்த ஒத்துழைப்பு அளிக்கின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்ட� ...

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச சிகிச்சை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச ...

இந்தியாவின் சுகாதார திட்டங்கள� ...

இந்தியாவின் சுகாதார திட்டங்களை பகிர்ந்து கொள்ள தயார் இந்தியாவின் பல்வேறு சுகாதார திட்டங்களின் நடைமுறைகளை உலக நாடுகளுடன் ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்� ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் அனைத்து கட்சிகளும் பாகுபாடு இன்றி தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு ஒன்றிணைய ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா ம� ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா முதல்வர் மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்துக்கு எந்த ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு.க.,வினரின் கீழ்த்தரமான செயல்பாடு 'தி.மு.க.,வின் கீழ்த்தரமான செயல்பாடு, தி.மு.க.,வினர் ஈடுபடும் அனைத்து பாலியல் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் சிந்துார்: பிரதமர் மோடி ஆவேசம் ''என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் ...

மருத்துவ செய்திகள்

எட்டியின் மருத்துவ குணம்

எட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் ...

இலந்தையின் மருத்துவ குணம்

ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ...

கருந்துளசியின் மருத்துவ குணம்

நஞ்சை முறிப்பவையாகவும், சீரணத்தைத் தூண்டுபவையாகவும் செயல்படுகிறது.