எந்த கட்சியையும் பாஜ பழிவாங்காது

எந்த கட்சியையும் பாஜ பழிவாங்காது என்று கோவில்பட்டியில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் காதிகிராப்ட் கட்டிட திறப்புவிழாவில் கலந்து கொள்வதற்காக மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கோவில்பட்டி வழியாக காரில்சென்றார். அவருக்கு கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி அருகே தேசியநெடுஞ்சாலையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: டிடிவி.தினகரன் மீது மாநில அரசு வழக்குதொடர்ந்துள்ளது. இந்த வழக்கு குறித்து கருத்துசொல்ல விரும்பவில்லை. இவ்வழக்கு பற்றி அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். எந்த கட்சியையும் பாஜ பழிவாங்காது. அந்தமாதிரி நடவடிக்கை எடுப்பதை நாங்கள் விரும்ப மாட்டோம்.

இந்தியாவில் மிகப் பெரிய மாநிலமாக உத்தரபிரதேசம் உள்ளது. இம்மாநிலத்தில் உள்ள தாஜ்மகாலை சுற்றுலா பட்டியலில் இருந்து நீக்கியதற்கு எந்தவித உள்நோக்கமும் இருப்பதற்கானவாய்ப்புகள் இல்லை. தாஜ்மகாலை சுற்றுலா பட்டியலில் இருந்து அம்மாநில அரசு நீக்கியது தொடர்பான உண்மையான நிலை என்ன என்பதை தெரிந்தபிறகுதான் கருத்து கூற முடியும். ஆனால் தாஜ்மகாலுக்கு இருக்கக்கூடிய மரியாதை என்றைக்குமே இருக்கும்.


சினிமா துறைக்கு மாநில அளவில் போடக்கூடிய வரி தான் இரட்டை வரிவிதிப்பாகும். ஒரு காலத்தில் சினிமா துறையில் மும்பைக்கு நிகராக முதல் நிலையில் தமிழக சினிமாத்துறை இருந்து வந்தது. அந்நிலையை தமிழக சினிமாத்துறை இழக்காமல் இருப்பதற்கு மாநிலஅரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கோரைக் கிழங்கு மருத்துவக் குணம்

உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் ...

மாதுளையின் மருத்துவ குணம்

புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ...

காட்டாமணக்கு இலையின் மருத்துவக் குணம்

இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ...