பாஜக தலைவர்கள் மீது குற்றச்சாட்டை சுமத்த கர்நாடக முதல்வர் சித்தரா மையாவுக்கு தார்மிக உரிமை யில்லை என எடியூரப்பா தெரிவித்தார்.
இதுகுறித்து செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: என்னை முறைகேடு வழக்கில் சிறைக்குச்சென்றவர் என காங்கிரஸார் குற்றம்சாட்டி வருகின்றனர். ஆனால், காங்கிரஸார் பலர் நேஷனல் ஹெரால்டு வழக்கில் சிறைக்குச்சென்றவர்கள் என்பதை மறக்கக்கூடாது. அக்கட்சித் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல்காந்தி, கர்நாடக பொதுப்பணித் துறை அமைச்சர் மகாதேவப்பாவின் மகன் சுனில்போஸ், அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ் உள்ளிட்டோர் மீது 52 புகார்கள் உள்ளன.
காங்கிரஸ்கட்சியினர் மீது தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுகள் குவிந்த வண்ணம் உள்ள நிலையில், என் மீது குற்றம்சாட்ட அவர்களுக்கு தார்மிக உரிமைஇல்லை. பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் மத்திய அரசு சிறப்பாக ஆட்சி செய்துவருகிறது. அவரின் சாதனையால் கர்நாடகத்தில் 2018-ஆம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக ஆட்சியை பிடிக்கும்.
ஆனால், மத்தியிலும், மாநிலத்திலும் தொடர்ந்து ஊழலில்ஈடுபட்டுள்ள காங்கிரஸ் கட்சியினர் சாதனை என்று எதையும் கூறமுடியாது. இதனால், வரும் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்க்கொள்ள அவர்கள் தயக்கம்காட்டி வருகின்றனர். தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் உரிய பாடம் கற்பிப்பார்கள் என்றார்.
பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ... |
உடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் முதன்மையாக இடம் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.