வெள்ளம், வறட்சியை சமாளிக்க, நதிகள் இணைப்புத் திட்டம் மிகவும் அவசியம்

குஜராத்துக்கு பிரதமர் நரேந்திரமோடியுடன் அண்மையில் நான் சென்றிருந்தேன். அப்போது நதிகள் இணைப்பு திட்டம் குறித்து நாங்கள் ஆலோசனை நடத்தினோம். அவர் அந்தத்திட்டத்தை ஏற்றுக்கொண்டார். அந்தத் திட்டத்தை செயல்படுத்த நமக்கு மிகப் பெரிய முதலீடுகள் தேவைப் படுகிறது. அதனால், அந்தத் திட்டத்துக்காக மிகப்பெரிய நிதித் தொகுப்பை உருவாக்குவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து அரசு ஆய்வு செய்துவருகிறது.


மத்திய அமைச்சரவையில் இதுதொடர்பான திட்டத்தை எனது அமைச்சகம் சமர்ப்பிக்கவுள்ளது. அடுத்த ஆண்டு செயல்படுத்தப்படவுள்ள 285 நீர்ப் பாசனத் திட்டங்களும் இதில் அடங்கும். இந்தத்திட்டத்தால், 1.88 கோடி ஹெக்டேர் விவசாய நிலங்கள் பயனடையும். இது தவிர, 27 நீர்ப்பாசனத் திட்டங்கள், இந்த ஆண்டின் இறுதியில் செயல்படுத்தி முடிக்கப்படவுள்ளன.


சொட்டுநீர் பாசனம், குழாய் மூலம் நீர்ப்பாசனம் ஆகியவைக்கே அரசு அதிக முன்னுரிமை கொடுத்துவருகிறது. இதனால்தான், தண்ணீரை சேமிக்க முடியும். மேலும், நிலம் கையகப்படுத்த செலவிடப்படும் தொகையும் மிச்சப்படும். குழாய் மூலம் பாசனத்துக்கு நீர் கொண்டு செல்வதால், நிலத்தை கையகப்படுத்தி கால்வாய்கள் அமைக்கச் செலவிடப்படும் தொகையில் ரூ.5 ஆயிரம் கோடியை சேமிக்க முடியும்.


வெள்ளம், வறட்சியை சமாளிப்பதற்கு, நதிகள் இணைப்புத்திட்டத்தை செயல்படுத்துவது மிகவும் அவசியமாகும். மத்திய அரசு தற்போது நதிகள் இணைப்பு தொடர்பான 30 திட்டங்களுக்கு ஒப்புதலை அளித்துள்ளது. அதில் 3 திட்டங்கள், விரைவில் தொடங்கவுள்ளது.


கழிவு நீரை வேறுவழியில் உபயோகிப்பதற்கான புதியவழிகளை கண்டுபிடிக்க வேண்டியுள்ளது. 
என்டிபிசி மின் நிலையங்களுக்கு கழிவு நீரை பயன் படுத்த முடியுமா? என்பதை ஆராயும்படி, மத்திய மின்சாரத் துறை அமைச்சருக்கு நான்கோரிக்கை விடுத்துள்ளேன்.

மத்திய நீர் வளங்கள், நதி நீர் மேம்பாட்டுத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 'இந்தியா தண்ணீர் வாரம்-2017' எனும் நிகழ்ச்சியில், பேசியது:

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

மருத்துவ செய்திகள்

திராட்சையின் மருத்துவக் குணம்

திராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, தோல், கண்களுக்கு ...

புற்றுநோயை குணபடுத்தும் ஒட்டக பால்

அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து ...

காட்டாமணக்கு இலையின் மருத்துவக் குணம்

இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ...