பா.ஜ.,வினர் ஒருவருடன் பிரதமர் மோடி போனில் பேசும் ஆடியோ

பிரதமர் மோடியும், குஜராத் பா.ஜ.க, வினர் ஒருவரும் போனில்பேசும் ஆடியோ வாட்சப்பில் வைரலாக பரவிவருகிறது. குஜராத் மாநிலம் வதோராவில் ஸ்டேஷனேரி கடை நடத்திவருபவர் கோபால்பாய் கோஹில் இவர் பா.ஜ.க,வில் இணைந்து கட்சி பணியுமாற்றி வருகிறார். கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலின்போது இவர் வதோராதொகுதியில் வார்டு மட்டத்தில் பணியாற்றியவர்

கடந்த 19ம் தேதி மாலை 4.30 மணிக்கு அவருக்கு ஒரு போன்கால் வந்தது. அதில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். இந்த உரையாடல் முழுவதும் குஜராத்தி மொழியில் இருந்தது. இதில் பிரதமர் மோடியும் – கோஹிலும் பரஸ்பரம் தீபாவளி வாழ்த்து க்களை பரிமாறிக் கொண்டதுடன் குஜராத் தேர்தல்குறித்தும் பேசினர்.

அப்பொழுது கோஹில் குஜராத் தேர்தலில் காங்., செய்துவரும் பொய் பிரச்சாரங்களை எப்படி சமாளிப்பது என்று கேட்டபோது பிரதமர் மோடி ‛‛ ஆரம்பி்த்த காலத்தில் இருந்தே இதுபோன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது. இதற்கு முன்னர் இதுபோல் நடந்த பொய் பிரச்சாரங்களின் போதும் மக்கள் நம்பிக்கையை பெற்று நாம் வெற்றிபெற்றுள்ளோம்.

நம் மீது பொய்களும் கேலிகளும் இல்லாத ஏதாவதுதேர்தலை உங்களால் சொல்ல முடியுமா? என்னை ரத்தகரை படிந்தவர், கொலைகாரர் என்று எல்லாம் பிரச்சாரம் செய்தார்கள் இதையும் மீறி மக்கள் நம்பிக்கையை நாம்வென்றுள்ளோம். மக்களுக்கு என்றும் உண்மை எது என புரியும்.

முன்னர் வாய் வழியாக பொய் பிரச்சாரங்களை பரப்பினர். இன்று வாட்ஸ் சப் வழியாக பரபரப்பி வருகின்றனர். இதுகுறித்து நாம் கவலை கொள்ள தேவையில்லை. நீங்கள் இதனால் உங்கள் கவனத்தை சிதறவிடாதீர்கள். நமது கொள்கையையும், பார்வையையும் உயர்வாகவைத்து உழையுங்கள். பொய்வதந்தி, கிசுகிசுக்களுக்கு கவனம்செலுத்தி நேரத்தை வீணடிக்காதீர்கள்.

நாம் எல்லா வற்றிலும் வெளிப்படையாக இருக்கவேண்டும். அதன் மூலம் பொய்பிரச்சாரங்களை தவிர்க்கலாம். நாம் நம்செயலில் தைரியமாகவும், நேர்மையாகவும் இருக்கவேண்டும். உண்மை தானாக மக்களை சென்றடையும்.'' என கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பப்பாளியின் மருத்துவக் குணம்

கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ...

மருதாணிப் பூவின் மருத்துவக் குணம்

மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ...

மகிழம் பூவின் மருத்துவக் குணம்

மகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் கிருமியும் இல்லாமல் ...