பெட்ரோலிய பொருட்கள் ஜி.எஸ்.டி வரி அமைப்புக்குள் கொண்டுவர மத்திய அரசு விருப்பம்:

மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி பாராளுமன்றத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், பெட்ரோலிய பொருட்கள் ஜிஎஸ்டி வரி அமைப்புக்குள் கொண்டுவர மத்திய அரசு விரும்புவதாக தெரிவித்துள்ளார். நாடுமுழுவதும் அமலில் உள்ள ஜிஎஸ்டி.யில் ஐந்து பிரிவுகளில் வரி விதிக்கப்படுகிறது. ஆனால் ஜி.எஸ்.டி. வரம்புக்குள் பெட்ரோலிய பொருட்கள் சேர்க்கப்படவில்லை. இந்நிலையில், மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின் போது காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் எம்.பி, பெட்ரோலிய பொருட்களை ஜி.எஸ்.டிக்குள் கொண்டு வருவது குறித்த மத்திய அரசின் நிலைப்பாடு என்ன என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் தற்போது 19 மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைந்துள்ளது. இந்தசூழ்நிலையில் ஜிஎஸ்டி. வரம்புக்குள் பெட்ரோலிய பொருட்களை சேர்ப்பதற்கு மத்திய அரசு ஏன்தயங்குகிறது என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த நிதியமைச்சர் அருண்ஜேட்லி, முந்தைய ஐ.மு. கூட்டணி அரசு தயாரித்த ஜி.எஸ்.டி. வரைவு மசோதாவில் ஜிஎஸ்டி. வரம்புக்குள் பெட்ரோலியபொருட்கள் சேர்க்கப்பட வில்லை. ஆனால் தற்போது பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரி வாயுவை ஜி.எஸ்.டி வரிவிதிப்பின் கீழ் கொண்டுவருவதற்கு மத்திய அரசு ஆதரவு தெரிவிக்கிறது என்று கூறியுள்ளார். எனினும் பெட்ரோலிய பொருட்களுக்கு பல்வேறு மாநிலங்களிலும் பல்வேறு விகிதங்களில் மதிப்புக் கூட்டு வரி வசூலிக்கப் படுகிறது.

எனவே மத்திய, மாநில அரசுகள் இடையே பல்வேறு பிரச்னைகள் எழும். இதுகுறித்து மாநில அரசுகள் இடையே, ஒருமித்த கருத்து ஏற்படவேண்டும். எனவே இவற்றை ஜி.எஸ்.டி.யின் கீழ் கொண்டு வருவதற்கு சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுடன் பேசி முடிவெடுக்க வேண்டும். மாநில அரசுகளின் ஒப்புதலுடன் மட்டுமே இதைசெயல்படுத்த முடியும். எனவே அனைத்து மாநில அரசுகளின் கருத்துகளைக் கேட்டு அதனடிப்படையில் முடிவெடுக்கப்படும் என்று அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார். ஜி.எஸ்.டி. வரம்பில் பெட்ரோலிய பொருட்களை சேர்க்க விரைவில் மாநில அரசுகள் ஒப்புக்கொள்ளும் என நம்புகிறேன் என்று கூறியுள்ள அவர், ஜி.எஸ்.டி.க்குள் பெட்ரோலிய பொருட்களை சேர்க்கும் யோசனைக்கு மத்திய அரசு ஆதரவு உண்டு என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தொட்டாற்சிணுங்கியின் மருத்துவக் குணம்

இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ...

சாத்துக்குடியின் மருத்துவக் குணம்

சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ...

பிரண்டையின் மருத்துவக் குணம்

குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது.