ஜெய் ராம் தாக்கூர் இமாச்சலப் பிரதேசத்தின் 13-வது முதல் மந்திரியாக பதவியேற்கிறார்

சமீபத்தில் நடந்து முடிந்த இமாச்சலப் பிரதேசம் மாநில சட்ட சபை தேர்தலில் மொத்தம் உள்ள 68 இடங்களில் பாஜக. 44 தொகுதிகளில் வெற்றிபெற்று ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை பலத்தைபெற்றது.

இந்த தேர்தலில் பா.ஜ.க. சார்பில் முதல்மந்திரி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த பிரேம் குமார் துமால் சுஜான்பூர் தொகுதியில் தன்னை எதிர்த்துபோட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரிடம் சுமார் 2 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

இதைதொடர்ந்து அம்மாநிலத்தின் புதிய முதல்மந்திரியை தேர்வு செய்யும் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் மத்திய மந்திரி ஜே.பி.நட்டா மற்றும் அக்கட்சியின் மேலிட பார்வையாளர்கள் முன்னிலையில் சிம்லா நகரில் நடைபெற்றது. இந்தகூட்டத்தில் சட்டமன்ற பாஜக. தலைவராகவும் புதிய முதல் மந்திரி யாகவும் ஜெய்ராம் தாக்கூர் தேர்வு செய்யப் பட்டார்.

ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் மாணவர் அமைப்பான அகிலபாரத வித்யார்தி பரிஷத் அமைப்பில் ஆரம்பத்தில் இணைந்து செயலாற்றிய ஜெய்ராம்தாக்கூர், கடந்த 1998-ம் ஆண்டு சாச்சியோட் சட்டமன்றதொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

2007 மற்றும் 2012 ஆண்டுகளுக்கு இடையில் இமாச்சலப் பிரதேசம் மாநில ஊரகம் மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை மந்திரியாகவும் இவர் பதவிவகித்தார்.

அதே தொகுதியில் தொடர்ந்து ஐந்து முறை வெற்றிபெற்றுள்ள இவர் இந்ததேர்தலில் 11,524 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பாஜக. தொண்டர்களுடனும், பொது மக்களிடமும் மிக இனிமையாகவும், எளிமையாகவும் பழகும் இயல்புடையவர் என அறியப்படும் ஜெய் ராம் தாக்கூர்(52) இமாச்சலப் பிரதேசத்தின் 13-வது முதல் மந்திரியாக சிம்லா நகரில் உள்ள ரிட்ஜேதிடலில் நாளை (புதன்கிழமை) பதவியேற்கவுள்ளார்.

இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திரமோடி, பாஜக. தேசிய தலைவர் அமித்ஷா, மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, மத்திய மந்திரிகள் ராஜ்நாத்சிங், அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ், நிதின்கட்கரி, அனந்த்குமார், இமாச்சலப்பிரதேசம் மாநில பாஜக. பொறுப்பாளர் தாவர் சந்த் கேலாட், அரியானா முதல் மந்திரி மனோகர் லால் கட்டார், கோவா முதல் மந்திரி மனோகர் பரிக்கர், உத்தரப்பிரதேசம் முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத், ராஜஸ்தான் முதல் மந்திரி வசுந்தரா ராஜே, சத்தீஸ்கர் முதல் மந்திரி சி.எம்.ரமன் சிங், மகாராஷ்டிரா முதல் மந்திரி தேவேந்திர பட்னவிஸ், அசாம் முதல் மந்திரி சர்பானந்தா சோனோவால், அருணாச்சலப்பிரதேசம் முதல் மந்திரி பேமா கன்டு, ஜம்மு-காஷ்மீர் துணை முதல் மந்திரி நிர்மல் சிங், உத்தரப்பிரதேசம் துணைமுதல் மந்திரிகள் கேசவ் பிரசாத் மவுரியா மற்றும் தினேஷ் சர்மா, பீகார் துணை முதல் மந்திரி சுஷில் குமார் மோடி உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்தபதவியேற்பு விழாவுக்கு நாளை காலை சுமார் 10.45 மணியளவில் சிம்லாநகரை வந்தடையும் பிரதமர் மோடியை வரவேற்க சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

பதவியேற்பு விழாவை சிம்லா நகரில் உள்ள பலபகுதி மக்களும் காணும் வகையில் நகரின் பல பகுதிகளில் பிரமாண்டமான எல்.இ.டி. தொலைக்காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கன்னம் குண்டாக வேண்டுமா ?

உங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா? உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க வேண்டுமா? கவலை ...

காய்ச்சலின் போது உணவு முறைகள்

கலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி ...

கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள்

*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ...