மன்மோகன் சிங்கின் நாட்டுப்பற்றை பிரதமர் நரேந்திர மோடி விமர்சிக்கவில்லை

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் நாட்டுப்பற்றை பிரதமர் நரேந்திர மோடி விமர்சிக்கவில்லை' என்று மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி மாநிலங்களவையில் புதன்கிழமை விளக்கமளித்தார். இதையடுத்து, கடந்த வாரம் முழுவதும் நாடாளுமன்ற முடக்கத்துக்கு காரணமாக இருந்த அந்தப்பிரச்னை முடிவுக்கு வந்தது.


முன்னதாக, குஜராத் தேர்தல் பிரசாரத்தின் போது, 'குஜராத் தேர்தலில் பாஜகவைத் தோற்கடிக்க பாகிஸ்தானுடன் இணைந்து முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உள்ளிட்டோர் சதிசெய்தனர்; பாகிஸ்தான் அதிகாரிகளுடன் மன்மோகன் சிங், முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி உள்ளிட்டோர் இதுதொடர்பாக ஆலோசித்தனர்' என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டினார்.


இந்த விவகாரம் நடப்பு நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரிலும் எதிரொலித்தது. மன்மோகன்சிங் மீது பொய்யான குற்றச்சாட்டு கூறிய மோடி, பகிரங்கமாக மன்னிப்புக்கேட்க வேண்டும் அல்லது தனது குற்றச்சாட்டு குறித்து அவர் உரியவிளக்கம் அளிக்க வேண்டுமென்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் காங்கிரஸ் வலியுறுத்தியது. இதனால் நாடாளுமன்ற அலுவல்கள் கடந்தவாரம் தொடர்ந்து பாதிக்கப்பட்டன. இதில் மாநிலங்களவை முற்றிலுமாக முடங்கியது.

இந்நிலையில், இரண்டுநாள் கிறிஸ்துமஸ் விடுமுறைக்குப் பிறகு நாடாளுமன்றம் புதன் கிழமை மீண்டும் கூடியது. அப்போது இது தொடர்பாக விளக்கமளித்து அருண்ஜேட்லி கூறியதாவது:முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் நாட்டுப் பற்றை பிரதமர் மோடி விமர்சிக்க வில்லை. அவரது தேசப்பற்று குறித்து எந்தக்கேள்வியையும் எழுப்பவில்லை. மன்மோகன் சிங், முன்னாள் குடியரசு துணைத்தலைவர் ஹமீது அன்சாரி ஆகிய இரு தலைவர்கள் மீதும் மிகப் பெரிய மரியாதை வைத்துள்ளோம்.

நமது நாட்டுக்காக அவர்கள் பணியாற்றியுள்ளார்கள். இதுதொடர்பாக எழுந்த சர்ச்சைகள் முற்றிலும் தவறானவை. தேர்தலின் போது அனைத்துத் தரப்பில் இருந்தும் பல்வேறு விதமான குற்றச்சாட்டுகள் எழுந்தன. அவை தொடர்பான சர்ச்சைகள் நீடிப்பதை மத்திய அரசு விரும்ப வில்லை என்றார்.

அருண் ஜேட்லிக்கு பதிலளித்து மாநிலங்களவை எதிர்க் கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் பேசியதாவது:
கடந்த பலநாள்களாக மாநிலங் களவையில் நீடித்து வந்தப்பிரச்னைக்கு தீர்வு கண்டதற்காக மாநிலங்களவைத் தலைவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், குஜராத் தேர்தலின் போது எங்கள் கட்சி உறுப்பினர் (மணிசங்கர் அய்யர்), பிரதமர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துதெரிவித்ததை அடுத்து, அவரை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்தோம். பிரதமர் குறித்து இதுபோன்ற விமர்சனங்களை ஏற்பதில்லை என்பதில் காங்கிரஸ் உறுதியாக உள்ளது' என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மே 2-ல் விழிஞ்சம் சர்வதேச துறைமு ...

மே 2-ல் விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி கேரளமாநிலம் திருவனந்தபுரம் விழிஞ்சத்தில் பொது-தனியார் கூட்டாண்மைமாதிரியின் கீழ் ரூ.8 ...

இயேசு கிறிஸ்துவின் தியாகத்தை ந ...

இயேசு கிறிஸ்துவின் தியாகத்தை நினைவு கூறுகிறோம் புனித வெள்ளி குறித்து மோடியின் பதிவு கிறிஸ்தவ மக்களின் புனித நாள்களில் ஒன்றாக கருதப்படும் புனித ...

தொழில்நுட்பத்துறையில் இணைந்து ...

தொழில்நுட்பத்துறையில் இணைந்து செயலாற்ற எலான் மஸ்குடன் பிரதமர் மோடி பேச்சு மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தில் அமெரிக்காவுடன் இணைந்து செயல்படுவதில் இந்தியா உறுதியாக ...

தேவைற்ற கருத்துக்களை சொல்லாதீ ...

தேவைற்ற கருத்துக்களை சொல்லாதீர்கள் – வங்க தேசத்திற்கு இந்தியா கண்டனம் மேற்குவங்கத்தில் வக்ப் திருத்த சட்டத்திற்கு எதிராக நடந்த வன்முறை ...

வக்ப் திருத்த சட்டம் : பிரதமர் ம ...

வக்ப் திருத்த சட்டம் : பிரதமர் மோடிக்கு  நன்றி தெரிவித்த தாவூதி போஹ்ரா சமூகத்தினர் வக்ப் திருத்தச் சட்டத்திற்கு நன்றி தெரிவிக்க தாவூதி போஹ்ரா ...

பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு இந் ...

பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு இந்தியா கண்டனம் காஷ்மீர் குறித்து பேசிய பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் ...

மருத்துவ செய்திகள்

காயகல்ப மூலிகைகள்

வல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, வில்வம், துளசி, ...

எலும்பு மஜ்ஜை குறைபாடு நீங்க

நோய் எதிர்ப்புச்  சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது  எலும்பு மஜ்ஜை ...

கறிவேப்பிலை | கறிவேப்பிலையின் மருத்துவ குணம்

கொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி ...