மன்மோகன் சிங்கின் நாட்டுப்பற்றை பிரதமர் நரேந்திர மோடி விமர்சிக்கவில்லை

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் நாட்டுப்பற்றை பிரதமர் நரேந்திர மோடி விமர்சிக்கவில்லை' என்று மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி மாநிலங்களவையில் புதன்கிழமை விளக்கமளித்தார். இதையடுத்து, கடந்த வாரம் முழுவதும் நாடாளுமன்ற முடக்கத்துக்கு காரணமாக இருந்த அந்தப்பிரச்னை முடிவுக்கு வந்தது.


முன்னதாக, குஜராத் தேர்தல் பிரசாரத்தின் போது, 'குஜராத் தேர்தலில் பாஜகவைத் தோற்கடிக்க பாகிஸ்தானுடன் இணைந்து முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உள்ளிட்டோர் சதிசெய்தனர்; பாகிஸ்தான் அதிகாரிகளுடன் மன்மோகன் சிங், முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி உள்ளிட்டோர் இதுதொடர்பாக ஆலோசித்தனர்' என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டினார்.


இந்த விவகாரம் நடப்பு நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரிலும் எதிரொலித்தது. மன்மோகன்சிங் மீது பொய்யான குற்றச்சாட்டு கூறிய மோடி, பகிரங்கமாக மன்னிப்புக்கேட்க வேண்டும் அல்லது தனது குற்றச்சாட்டு குறித்து அவர் உரியவிளக்கம் அளிக்க வேண்டுமென்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் காங்கிரஸ் வலியுறுத்தியது. இதனால் நாடாளுமன்ற அலுவல்கள் கடந்தவாரம் தொடர்ந்து பாதிக்கப்பட்டன. இதில் மாநிலங்களவை முற்றிலுமாக முடங்கியது.

இந்நிலையில், இரண்டுநாள் கிறிஸ்துமஸ் விடுமுறைக்குப் பிறகு நாடாளுமன்றம் புதன் கிழமை மீண்டும் கூடியது. அப்போது இது தொடர்பாக விளக்கமளித்து அருண்ஜேட்லி கூறியதாவது:முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் நாட்டுப் பற்றை பிரதமர் மோடி விமர்சிக்க வில்லை. அவரது தேசப்பற்று குறித்து எந்தக்கேள்வியையும் எழுப்பவில்லை. மன்மோகன் சிங், முன்னாள் குடியரசு துணைத்தலைவர் ஹமீது அன்சாரி ஆகிய இரு தலைவர்கள் மீதும் மிகப் பெரிய மரியாதை வைத்துள்ளோம்.

நமது நாட்டுக்காக அவர்கள் பணியாற்றியுள்ளார்கள். இதுதொடர்பாக எழுந்த சர்ச்சைகள் முற்றிலும் தவறானவை. தேர்தலின் போது அனைத்துத் தரப்பில் இருந்தும் பல்வேறு விதமான குற்றச்சாட்டுகள் எழுந்தன. அவை தொடர்பான சர்ச்சைகள் நீடிப்பதை மத்திய அரசு விரும்ப வில்லை என்றார்.

அருண் ஜேட்லிக்கு பதிலளித்து மாநிலங்களவை எதிர்க் கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் பேசியதாவது:
கடந்த பலநாள்களாக மாநிலங் களவையில் நீடித்து வந்தப்பிரச்னைக்கு தீர்வு கண்டதற்காக மாநிலங்களவைத் தலைவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், குஜராத் தேர்தலின் போது எங்கள் கட்சி உறுப்பினர் (மணிசங்கர் அய்யர்), பிரதமர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துதெரிவித்ததை அடுத்து, அவரை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்தோம். பிரதமர் குறித்து இதுபோன்ற விமர்சனங்களை ஏற்பதில்லை என்பதில் காங்கிரஸ் உறுதியாக உள்ளது' என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கண்களில் எவ்வகைக் கோளாறுகள் ஏற்படுகின்றன?

1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ...

கரு கூடாமல் போவதற்கு யார் காரணம்?

கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ...

இளநீரின் மருத்துவ குணம்

காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ...