மன்மோகன் சிங்கின் நாட்டுப்பற்றை பிரதமர் நரேந்திர மோடி விமர்சிக்கவில்லை

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் நாட்டுப்பற்றை பிரதமர் நரேந்திர மோடி விமர்சிக்கவில்லை' என்று மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி மாநிலங்களவையில் புதன்கிழமை விளக்கமளித்தார். இதையடுத்து, கடந்த வாரம் முழுவதும் நாடாளுமன்ற முடக்கத்துக்கு காரணமாக இருந்த அந்தப்பிரச்னை முடிவுக்கு வந்தது.


முன்னதாக, குஜராத் தேர்தல் பிரசாரத்தின் போது, 'குஜராத் தேர்தலில் பாஜகவைத் தோற்கடிக்க பாகிஸ்தானுடன் இணைந்து முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உள்ளிட்டோர் சதிசெய்தனர்; பாகிஸ்தான் அதிகாரிகளுடன் மன்மோகன் சிங், முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி உள்ளிட்டோர் இதுதொடர்பாக ஆலோசித்தனர்' என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டினார்.


இந்த விவகாரம் நடப்பு நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரிலும் எதிரொலித்தது. மன்மோகன்சிங் மீது பொய்யான குற்றச்சாட்டு கூறிய மோடி, பகிரங்கமாக மன்னிப்புக்கேட்க வேண்டும் அல்லது தனது குற்றச்சாட்டு குறித்து அவர் உரியவிளக்கம் அளிக்க வேண்டுமென்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் காங்கிரஸ் வலியுறுத்தியது. இதனால் நாடாளுமன்ற அலுவல்கள் கடந்தவாரம் தொடர்ந்து பாதிக்கப்பட்டன. இதில் மாநிலங்களவை முற்றிலுமாக முடங்கியது.

இந்நிலையில், இரண்டுநாள் கிறிஸ்துமஸ் விடுமுறைக்குப் பிறகு நாடாளுமன்றம் புதன் கிழமை மீண்டும் கூடியது. அப்போது இது தொடர்பாக விளக்கமளித்து அருண்ஜேட்லி கூறியதாவது:முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் நாட்டுப் பற்றை பிரதமர் மோடி விமர்சிக்க வில்லை. அவரது தேசப்பற்று குறித்து எந்தக்கேள்வியையும் எழுப்பவில்லை. மன்மோகன் சிங், முன்னாள் குடியரசு துணைத்தலைவர் ஹமீது அன்சாரி ஆகிய இரு தலைவர்கள் மீதும் மிகப் பெரிய மரியாதை வைத்துள்ளோம்.

நமது நாட்டுக்காக அவர்கள் பணியாற்றியுள்ளார்கள். இதுதொடர்பாக எழுந்த சர்ச்சைகள் முற்றிலும் தவறானவை. தேர்தலின் போது அனைத்துத் தரப்பில் இருந்தும் பல்வேறு விதமான குற்றச்சாட்டுகள் எழுந்தன. அவை தொடர்பான சர்ச்சைகள் நீடிப்பதை மத்திய அரசு விரும்ப வில்லை என்றார்.

அருண் ஜேட்லிக்கு பதிலளித்து மாநிலங்களவை எதிர்க் கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் பேசியதாவது:
கடந்த பலநாள்களாக மாநிலங் களவையில் நீடித்து வந்தப்பிரச்னைக்கு தீர்வு கண்டதற்காக மாநிலங்களவைத் தலைவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், குஜராத் தேர்தலின் போது எங்கள் கட்சி உறுப்பினர் (மணிசங்கர் அய்யர்), பிரதமர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துதெரிவித்ததை அடுத்து, அவரை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்தோம். பிரதமர் குறித்து இதுபோன்ற விமர்சனங்களை ஏற்பதில்லை என்பதில் காங்கிரஸ் உறுதியாக உள்ளது' என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

சர்க்கரை நோய் குணமாக

முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ...

தொப்புள் கொடி உயிர் அணு (Stem Cord Cells)

Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ...

கருந்துளசியின் மருத்துவ குணம்

நஞ்சை முறிப்பவையாகவும், சீரணத்தைத் தூண்டுபவையாகவும் செயல்படுகிறது.