ராகுல் காந்திக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம்

மத்திய அமைச்சர் அருண் ஜேட்லியை கிண்டல் செய்ததற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு எதிராக மாநிலங்களவையில் பாஜக நேற்று உரிமைமீறல் தீர்மானம் கொண்டுவந்தது.

அவை விதி 187-ன் கீழ், பாஜக உறுப்பினர் புபேந்திரயாதவ் இத்தீர்மானத்தை கொண்டுவந்தார். மாநிலங்களவை பாஜக தலைவரான அருண் ஜேட்லியின் உரிமை மீறப்பட்டுள்ளதை அவைத்தலைவர் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

இதுதொடர்பாக புபேந்திர யாதவ் பேசும்போது, “இந்த அவை உறுப்பினர்களுக்கென்று தனிகவுரவம் உள்ளது. இந்த அவையின் புகழைகெடுக்கும் தீய நோக்கத்துடன் நிதியமைச்சர் அருண்ஜேட்லியின் பெயரை ராகுல் காந்தி பயன்படுத்தியுள்ளார். இதை உரிமைமீறலாக கருத நிறைய முன்னுதாரணங்கள் உள்ளன. எனவே ராகுல்காந்திக்கு நோட்டீஸ் அளிக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

குஜராத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மீதான குற்றச்சாட்டுக்கு பிரதமர் மோடி மன்னிப்புக் கேட்க வலியுறுத்தி, நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் உறுப்பினர்கள் கடந்தவாரம் அமளியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து மன்மோகன் சிங்கின் நாட்டுப்பற்றை பிரதமர் விமர்சிக்க வில்லை என அருண் ஜேட்லி விளக்கம் அளித்தார்.

இதையடுத்து ராகுல் தனது ட்விட்டர் பக்கத்தில், “பிரதமர் நினைப்பது ஒன்று, பேசுவதுவேறு என்பதை நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்திய ஜேட்லிக்கு நன்றி” என பதிவிட்டார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கர்ப்ப காலத்தில் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மருத்துவரைப் பார்ப்பது நல்லது?

முதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை அணுகி சிசுவின் ...

சாத்துக்குடியின் மருத்துவக் குணம்

சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ...

பயமுறுத்தும் ப‌ன்றிக் காய்ச்சல்

ப‌ன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ...