21 மாநிலங்களில் பாஜக ஆட்சி பெருமை ப்படுகிறேன்

திரிபுரா, மேகாலயா மற்றும் நாகாலாந்து ஆகிய 3 வட கிழக்கு மாநிலங்களுக்குான பேரவைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை சனிக்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் திரிபுரா மற்றும் நாகாலாந்தில் பாஜக தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. மேகால யாவில் இழுபறி நீடித்துவருகிறது.

திரிபுராவில் 41 இடங்களில் முன்னிலையுடன் பாஜக ஆட்சியமைக்க உள்ளது. இதன் மூலம் அங்கு கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்றுவந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சிக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா செய்தியாளர்களிடம் பேசியதாவது:

இந்தியாவில் இனி இடதுசாரிகளுக்கு எந்தஉரிமையும் இல்லை என்பதை இந்த தேர்தல் முடிவுகள் சுட்டிக் காட்டியுள்ளது. இந்த 3 மாநிலங்களிலும் எங்களுடன் கூட்டணி அமைத்தகட்சிகளுக்கு அமைச்சரவையில் இடமிளிக்கப்படும் என்பதை உறுதிபடுத்துகிறேன்.

ஒருவேளை மேகாலயாவில் பாஜக ஆட்சி அமைக்க இயலா விட்டாலும் நாடு முழுவதும் 21 மாநிலங்களில் பாஜக ஆட்சி நடைபெறுவதை நினைத்து பெருமைப்படுகிறேன். இன்னும் கேரளா, ஒடிஸா மற்றும் மேற்குவங்கம் மட்டும்தான் மீதமுள்ளது.

இந்தமாபெரும் வெற்றி அளித்த உற்சாகத்துடன் கர்நாடக தேர்தலைச்சந்திக்க உள்ளோம். எனவே கர்நாடகத்திலும் பாஜக வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில் இந்தவெற்றி அந்த நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக-வுக்கு தொடர்ந்து கிடைத்துவரும் இந்தவெற்றி 2019-ல் நடைபெறவுள்ள தேர்தலை எதிர்கொள்ள உற்சாகமளித்துள்ளது. இது பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான ஆட்சியின் வளர்ச்சி திட்டங்களுக்கு கிடைத்தவெற்றி. இந்தியாவின் வட கிழக்குப் பகுதிகள் போதிய வளர்ச்சியை அடையவில்லை என்று கூறிய பிரதமர் அங்கு நலத் திட்டப் பணிகளை துரிதப்படுத்தினார். இது அந்த திட்டங்களுக்கு கிடைத்த வெற்றி என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை எ ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக � ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக பாஜக நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் விளக்கம் “மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுந ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பீகார் பயணம் இந்தியா- நேபாளம் எல்லையில் பீகார் பகுதியில் இந்திய வான் ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற� ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதம� ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதமர் மோடி வழங்கிய தகவல்களும் அறிவுரை முக்கியமான ஒரு ஆய்வு சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்� ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்கரவாதம்: பிரதமர் மோடி பயங்கரவாதத்தை மறைமுகப் போா் என்பதையும் கடந்து, நன்கு திட்டமிட்ட ...

மருத்துவ செய்திகள்

ஜலதோஷம் குணமாக

கடுகு, திப்பிலி, சீரகம், மிளகு மற்றும் சுக்கு இவற்றில் சிறிதளவு எடுத்து கொள்ள ...

ஆள்வள்ளிக்கிழங்கு

இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் ...

உடல் பலம் பெற

100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ...