4 தலைமுறை ஆட்சியில் காங்கிரஸ் நாட்டுக்கு என்ன செய்துள்ளது

பா.,ஜனதா கட்சியின் 38-வது ஆண்டு நிறுவன நாள் நேற்று நாடுமுழுவதும் கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொள்வதற்காக மராட்டியத்தின் அனைத்து பகுதிகளிலும்இருந்து பா.ஜனதா தொண்டர்கள் மும்பையில் குவிந்தனர். அவர்கள் பஸ், கார், வேன் உள்ளிட்ட 50 ஆயிரம்வாகனங்கள் மற்றும் 28 சிறப்பு ரெயில்களில் வந்தனர்.

பிரமாண்ட மாநாட்டில் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா, மகாராஷ்டிர முதல்மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், மத்திய மந்திரி நிதின் கட்கரி உள்பட பலர் கலந்துகொண்டனர். அப்போது அமித்ஷா பேசியதாவது:

அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் நேரம் நெருங்கி விட்டது. ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று பிரதமர் மோடி ஆட்சியின் 4 ஆண்டுகால சாதனைகளை மக்களுக்கு எடுத்துக்கூறவேண்டும்.

பிரதமர் மோடியின் கனவான புதியஇந்தியாவை படைக்க மீண்டும் பா.ஜ.க.வை முழு மெஜாரிட்டியுடன் ஆட்சியில் அமர்த்த தொண்டர்கள் உறுதியேற்கவேண்டும். பாராளுமன்ற தேர்தல் மட்டுமின்றி ஒடிசா, மேற்கு வங்காளம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்து வரும் சட்டமன்ற தேர்தல்களிலும் பாஜக. ஆட்சியை கைப்பற்றவேண்டும்.

பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க் கட்சிகள் கூட்டணி அமைக்க முயற்சித்து வருகின்றன. வெள்ளம்பெருக்கெடுத்து வரும் போது, பாம்புகள், குரங்குகள், பூனைகள் என ஒன்றுக்கொன்று சம்பந்தமற்ற விலங்குகள் உயிர்பிழைப்பதற்காக ஒரே இடத்தில் கூடுவது இயல்பானது. அதுபோலவே, நரேந்திர மோடி எனும் வெள்ளம் இந்திய அரசியலில் பெருக்கெடுத்ததன் விளைவாக, எதிர்க் கட்சிகள் தங்களை காத்துக் கொள்ள கூட்டணி வைக்க முயற்சி செய்கின்றன

4 ஆண்டு ஆட்சியில் பாரதீய ஜனதா என்ன செய்துவிட்டது என ராகுல் காந்தி கேட்கிறார். 4 தலைமுறை ஆட்சியில் காங்கிரஸ் நாட்டுக்கு என்ன செய்துள்ளது என்பதை முதலில் அவர் மக்களுக்கு கூற வேண்டும்.

உத்தரபிரதேச இடைத்தேர்தலில் பா.ஜனதா தோல்வி அடைந்ததற்கு ராகுல் காந்தி இனிப்பு வழங்கி கொண்டாடி உள்ளார். ஆனால் அந்த தொகுதிகளில் காங்கிரஸ் ‘டெபாசிட்’ கூட பெறவில்லை. தனது கட்சி ‘டெபாசிட்’ இழந்துள்ள ஒரு தேர்தலை இனிப்பு வழங்கி கொண்டாடிய ஒரே தலைவர் நாட்டிலேயே ராகுல் காந்தியாக மட்டும்தான் இருப்பார் என ஆவேசமாக பேசினார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உலகின் 3வது பெரிய பொருளாதார நாட� ...

உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக மாற செய்ய வேண்டியது என்ன? சிறு நகர வளர்ச்சிக்கு பிரதமர் மோடி முக்கியத்துவம் உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாட்டிலிருந்து மூன்றாவது பெரிய ...

குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடியில� ...

குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடியில் வளர்ச்சி திட்டங்கள் குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் ...

இனி வெளிநாட்டுப் பொருட்களைப் ப� ...

இனி வெளிநாட்டுப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம் -பிரதமர் மோடி வேண்டுகோள் காந்திநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ...

பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால ஆட் ...

பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால ஆட்சியை மறந்து விட்டது பாகிஸ்தான் – அமித்ஷா மகாராஷ்டிரா மாநிலம் நாந்தேட்டில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மத்திய ...

அரசு ரப்பர் தொழிலாளர்களுக்கு ப� ...

அரசு ரப்பர் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கவசங்கள்: திமுக அரசுக்கு பா.ஜ., வலியுறுத்தல் கடந்த 152 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கீரிப்பாறை ...

தவிக்கும் தென் மாவட்ட மக்கள்

தவிக்கும் தென் மாவட்ட மக்கள் ''தாமிரபரணி ஆற்றிலிருந்து நேரடியாக எடுக்கப்படும் குடிநீர் மாசுபட்டிருப்பதால் தென் ...

மருத்துவ செய்திகள்

சாத்துக்குடியின் மருத்துவக் குணம்

சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ...

உறக்கத்தின் முக்கியத்துவம்

மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ...

முட்டைகளின் மருத்துவக் குணம்

கோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் வேகவைத்தால் கெட்டியாய்விடும்; ...