அரசியலுக்கு நிறைய களங்கள் உள்ளன. ஆஷிபாக்களின் கல்லறைகளில் வேண்டாம்

ஆஷிபாவிற்காக பல இந்து அமைப்பு நபர்களே கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். ஆனால் மறைத்து வைக்கப்பட்டது கோயில் என்ற காரணத்தினாலும் குற்றத்தில் தொடர்புடையோர் இந்து பெயர் கொண்ட காரணத்தினாலும் மட்டுமே அவர்கள் மீது பிஜேபி முத்திரை குத்துவதை பார்க்க முடிகிறது. அதிலும் ஐஎஸ்ஐஎஸ் செய்த தவறுக்கு ஒட்டுமொத்த முஸ்லீம்களை குறை சொல்லக் கூடாது, பாதிரிகளின் சல்லாபங்களுக்கு ஒட்டு மொத்த கிருஸ்தவர் மீது குற்றம் சொல்லக் கூடாது என நமக்கு போதித்தவர்களே இதை விரும்பி செய்கின்றனர்.

அதோடு கடலூரில் ஒருகுறிப்பிட்ட சமூக ஆஷிபா அதே சமூக காமுகன் ஒருவனால் கொலை செய்யப்பட்டு மாற்று சமூகத்தின் மீது பழி சுமத்திய போது பொங்கிவிட்டு அதே சமூகம் என்று தெரிந்தவுடன் மௌனியானவர்கள் இன்று காஷ்மீர் ஆஷிபாவிற்காக கண்ணீர் சிந்துகிறார்கள். சென்னையில் ஒரு ஆஷிபாவை கொலை செய்ததோடு தன் தாயையும் கொலை செய்தவனின் சாதி தேடியவர்கள் இன்று காஷ்மீர் ஆஷிபாவிற்காக குரல் கொடுக்கிறார்கள். நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஒரு ஆஷிபா சராமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்ட போது, காதலித்து ஏமாற்றினால் வெட்ட தான் செய்வான் என நியாயம் பேசியவர்கள் இன்று காஷ்மீர் ஆஷிபாவிற்காக நியாயம் கேட்கிறார்கள்.


'லவ் ஜிகாத்' என்ற பெயரில் காம ஆட்டம் நடத்தி ஒரு ஆஷிபாவை நாடு கடத்த முயன்ற போது தடுத்த அவளது தந்தையை எட்டி உதைத்து நகைத்தவர்கள் இன்று காஷ்மீர் ஆஷிபாவிற்காக களத்தில் போராட நினைக்கிறார்கள்.

கேரளாவில் பள்ளிக்கு சென்ற ஒரு ஆஷிபாவின் வயிற்றில் கருவை கொடுத்த போது சிறுபான்மை நலம் பேசியவர்கள் இன்று காஷ்மீர் ஆஷிபாவிற்காக கைகளை உயர்த்துகிறார்கள்.குற்றங்கள் எங்கு நடந்தாலும் குற்றம் தான். சிறுபான்மை பெரும்பான்மை பேதம் குற்றங்களுக்கு இல்லை.

மகாபாரத யுத்தம் நடக்கும் போது, கண்ணனிடம் அர்ஜுனன் கேட்கிறான், "கண்ணா… எதிரே நின்று நான் சண்டையிடப்போகிறவர்கள் எனது சகோதரர்கள், எனது ஆசான், எனது பிதாமகன், அவர்களை நான் எப்படி கொல்ல முடியும்?" என்று. கண்ணன் கூறினான், "அவர்கள் உனக்கு சகோதரர்களாக இருக்கலாம். ஆனால் பெண்ணை அவமானம் செய்த அதர்மிகள். அவர்கள் உனது ஆசானாகவோ பிதாமகனாகவோ இருக்கலாம்,

ஆனால் பெண்ணிற்கு நடந்த அநீதியை தடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டு தர்மத்தை காக்க தவறியவர்கள். அவர்கள் எத்தனை உத்தம குணமும் திறனும் கொண்டிருந்தாலும் அதை விட பெண் நீதியை மறுத்த பாவிகள். அவர்கள் யாராக இருந்தாலும் கொல்ல தயங்காதே. வில்லினை எடு வீரா" என்று மறுமொழி கூறினான். இந்துத்துவம் மோசனமானதல்ல. ஆனால் இந்துத்துவத்தில் மோசமானவர்கள் இல்லாமல் இல்லை. இந்துத்துவவாதிகளை விட இந்துத்துவமே முக்கியம். இந்து என்ற காரணத்திற்காக மட்டும் அநீதி இழைப்போரை மன்னித்துவிடச் சொல்லி இந்துமதம் என்றும் கூறவில்லை. அதனால் ஆஷிபா கொலையில் அவளின் துயரும் கொடுமையுமே நமக்கு தெரிய வேண்டுமே தவிர அவளது மதமோ இனமோ அல்ல…

குதிரை மேய்க்க சென்றவளை இரு சிறுவர்கள் வன்புணர்வு செய்ய முயலும் போது, "பாலியல் குறித்த விழிப்புணர்வு அளிக்காத சமூகத்திடம் கோபம் கொள்ளாமல், அவள் மயங்கியவுடன் அந்த சிறுவனின் தந்தை கோயிலுக்குள் மறைத்து வைத்த போது தவறுக்கு உடந்தையாக உள்ளவர்கள் மீது கடுமைகாட்டாத சட்டத்தின் மீது கோபம் கொள்ளாமல்கொள்ளாமல், அதை விசாரிக்க வந்த போலீஸ் அதிகாரிகள் லஞ்சம் வாங்கி தாங்களும் அந்த தவறில் பங்கு கொண்டபோது ஊழலின் மீது கோபம் கொள்ளாமல், தவறை கண்டுபிடிக்க வேண்டிய குழுவில் தவறு செய்தவனே இருக்கும் அதிகாரிகளின் மீது வராத கோபம் அவர்கள் சார்ந்த மதத்தின் மீது மட்டும் வந்துவிடும் என்றால் நிச்சயம் இது அரசியல் தான்…

ஆஷிபா குழந்தை. அதுவும் பெண்குழந்தை. அதற்கு அநீதி நடந்துள்ளது. அதற்கான நீதியை பெற்றுத் தர மனிதனாகவோ இந்துவாகவோ நமக்கு கடமை இருக்கிறது. அந்த கடமைக்காக எங்களது கரங்கள் உயர்ந்தே நிற்கும். அரசியலுக்கு நிறைய களங்கள் உள்ளன. ஆஷிபாக்களின் கல்லறைகளில் வேண்டாம்.

One response to “அரசியலுக்கு நிறைய களங்கள் உள்ளன. ஆஷிபாக்களின் கல்லறைகளில் வேண்டாம்”

  1. ANANTH S says:

    அணிந்திருக்கும் கண்ணாடியின் நிறத்தை பொறுத்தே காட்சிகளின் வண்ணம் நிர்ணயக்கப்படுகின்றது….உங்கள் கண்ணாடியும் மற்றவர் கண்ணாடியும் ஒரே நிறமாக இருக்க வேண்டிய அவசியமில்லை.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் என்கவுன்டர்களை கு ...

தமிழகத்தில் என்கவுன்டர்களை குறைக்க வேண்டும் L. முருகன் கருத்து 'தமிழகத்தில் என்கவுன்டர்களை குறைக்க வேண்டும். துப்பாக்கியை வைத்து சட்டம் ...

பென் நெவிஸ் சிகரம் ஏறி பா.ஜ.க தலை ...

பென் நெவிஸ் சிகரம் ஏறி பா.ஜ.க தலைவர் அண்ணாமலை சாதனை ஸ்காட்லாந்தில் பென் நெவிஸ் சிகரம் மீதேறி பா.ஜ., மாநில ...

ஒரே பதவி ஒரே பென்சன் திட்டம் கு ...

ஒரே பதவி ஒரே பென்சன் திட்டம் குறித்து ராணுவ வீரர்களிடம் காங்கிரஸ் பொய் கூறுகிறது பிரதமர் மோடி பேச்சு '' ஒரே பதவி, ஒரே பென்சன் திட்டம் குறித்து ...

7 ஆண்டுகளில் இருமடங்கான பெண்களி ...

7 ஆண்டுகளில் இருமடங்கான பெண்களின் சக்தி மண்டோலியா பெருமிதம் கடந்த 7 ஆண்டுகளில் பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை இருமடங்கு ...

காங்கிரஸ் ஆட்சியில் ஹரியானா அர ...

காங்கிரஸ் ஆட்சியில் ஹரியானா அரசை, புரோக்கர்களும், வாரிசுகளும் ஆட்டிப்படைத்தனர் -அமித் ஷா 'காங்கிரஸ் ஆட்சியில் ஹரியானா அரசை,புரோக்கர்களும்,வாரிசுகளும் தான் ஆட்டிப்படைத்தனர்,' என ...

அரசியல் என்ற வார்த்தையின் அர்த ...

அரசியல் என்ற வார்த்தையின் அர்த்தம் மாறிவிட்டது நிதின் கட்கரி கருத்து  ''ஒரு காலத்தில் அரசியல் என்றால், மக்கள் சேவை, நாட்டை ...

மருத்துவ செய்திகள்

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம ?

இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து ...

சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும் வெள்ளரி காய்

வெள்ளரி காய் சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும். தாகம் தணிக்கும், நரம்புகளுக்கு வலிமை ...

இலவங்கப் பத்திரி மூலம் நாம் பெறும் மருத்துவம்

இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ...