பிற்படுத்தப் பட்டோரின் உரிமையை பாதுகாத்தவர் அம்பேத்கர்

நாட்டில் தாழ்த்தப்பட்டவர்கள் உள்ளிட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகளை, தாம் இயற்றிய அரசியல்சட்ட சாசனம் மூலமாக பாதுகாத்தவர் அம்பேத்கர் என பிரதமர் நரேந்திரமோடி புகழாரம் சூட்டினார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் பல்வேறு நலத் திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திரமோடி நேற்று அங்கு சென்றார். ராய்ப்பூர் விமான நிலையத்துக்கு வந்தவருக்கு, முதல்வர் ரமண்சிங் உள்ளிட்ட மாநில அமைச்சர்கள் உற்சாகவரவேற்பு அளித்தனர். அதன்பின்னர், நக்சல் ஆதிக்கம்நிறைந்த பிஜாப்பூர் மாவட்டத்துக்குச் சென்ற அவர், அங்கு பல்வேறு நலத் திட்டங்களை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:

இந்தியாவில் ஒரு காலத்தில், தலித் மக்களுக்கும், பின்தங்கிய வகுப்பினருக்கும் அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்பட்டிருந்தன. தலித் சமூகத்தில் பிறப்பதையே சாபக்கேடாக கருதிய காலகட்டம் அது. அதன் கொடுமையையும், வலியையும் முழுமையாக அனுபவித்தவர் அம்பேத்கர்.

இந்தக் கொடுமையிலிருந்து ஒட்டுமொத்த சமூகத்தையும் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில்தான், மனிதராக பிறந்த அனைவருக்கும் சம உரிமைகள் வழங்கும் உயரிய அரசியல் சட்டசாசனத்தை அவர் வடிவமைத்தார்.

அம்பேத்கர் என்ற ஒருவரால் தான், தலித் சமூகத்தினரும், பின் தங்கிய சமூகத்தினரும் தங்களின் உரிமைகளைப் பெற முடிந்திருக்கிறது. அம்பேத்கர் மட்டும் இல்லையென்றால், ஒரு ஒடுக்கப்பட்ட கிராமத்தில் பிறந்த மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச்சேர்ந்த நான், இந்தியாவின் பிரதமராக உயர்ந்திருக்க முடியாது.

அனைவருக்கும் சம உரிமைகளை உறுதிசெய்யும் அம்பேத்கரின் அரசியல் சட்ட சாசனத்தை அடிப்படையாகக் கொண்டே மத்திய அரசு செயல்படுகிறது. எனவே, உரிமைகளைப் பாதுகாக்கவேண்டி, யாரும் ஆயுதம் ஏந்த வேண்டிய அவசியமில்லை. நக்சல்கள், வன்முறைப் பாதையைக் கைவிட்டு தேசியநீரோட்டத்தில் இணைய வேண்டும். நாட்டின் வளர்ச்சியில் அவர்களும் பங்கெடுக்கவேண்டும் என்றே அரசு விரும்புகிறது. இவ்வாறு நரேந்திர மோடி பேசினார்.

முன்னதாக, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத்காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் முதல் சுகாதார மையத்தை பிஜாப்பூரில் மோடி தொடங்கிவைத்தார்.

குடூர் – பானுபிரதாப்பூர் இடையே புதியபயணிகள் ரயிலையும் அவர் தொடங்கி வைத்தார். புதிய சாலை, மேம்பால திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சர்க்கரை நோயால் ஏற்ப்படும் பாதிப்புக்கள்

உங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். உதாரணமாக, கண்பார்வை ...

காய்ச்சலின் போது உணவு முறைகள்

கலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி ...

மூலிகைப் பெயர் பார்த்தவுடன் நினைவுக்கு வரும் நோய்கள்

அருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் பெருக்கும். அரசு கர்பப்பை கோளாறு, ...