ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து ஆரம்பத்தில் இருந்து போராடியவன் நான்

ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து ஆரம்பத்தில்இருந்து போராடியவன் நான்.  முந்தைய தேர்தலின் போது, ஸ்டெர்லைட் ஆலைச்சார்பில் எனக்கு பணம் கொடுத்த போது கூட அதைத் திருப்பி அனுப்பினேன். நான் பெட்டிவாங்கிவிட்டதாக பலரும் அவதூறு பரப்பிவருகிறார்கள்" என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் பல்வேறு திட்டங்களைத் துவக்கிவைத்த பின் செய்தியாளர்களிடம் பேசியவர், "ஸ்டெர்லைட் ஆலை வருவதற்கு முன்பு  4 நாட்கள்  நான் உண்ணா விரதம் இருந்தேன். அன்று மக்கள்யாருமே ஆதரவுதர தயாராக இல்லை. அனைவருமே வேலைக்கிடைக்கும் என்றே நினைத்து இருந்தனர். அதனால் ஆலை எளிதாகத்  துவங்கப்பட்டுவிட்டது. அப்போது அந்த ஆலைத்தரப்பில் என்னிடம் டீல் பேசினர். அவர்கள் அணுகியபோதும், தேர்தல்செலவுக்காக எனக்கு பணம் கொடுத்த போதும் மறுத்தவன் நான்.

அன்றைய கால கட்டங்களில் மாநிலத்தில் திமுக, அதிமுக மற்றும் மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசுகளே இந்த ஆலை இயங்க ஒப்புதல் அளித்தனர். ஆனால், இன்று பாதிப்புஇருக்கிறது என்றால் ஏன் வந்தது, எப்படிவந்தது, எனச் சரி கட்ட வேண்டியது உள்ளது. 


ஸ்டெர்லைட் ஆலையுடன் ஊசிமுனை அளவு கூட எனக்குத் தொடர்பு கிடையாது. உண்ணாவிரதம் இருந்து தோற்றுப்போனவன் நான். இந்த விவகாரத்தில் மாநில அரசு கவனித்துக்கொண்டு இருக்கிறது. அவர்கள் என்ன செய்கிறார்கள் எனச் பார்ப்போம்.

 ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் உண்மையான பிரச்னை என்ன என்பதை மாநில அரசு கண்டுபிடிக் கட்டும். கூடங்குளம் திட்டம் வருவதற்கு முன்பு போராடிய நான், திட்டம்வந்த பிறகு அந்தத்திட்டம் வர வேண்டும் என்றே நான் கூறினேன்.

 ஸ்டெர்லைட் விவகாரத்தில் மக்களின் கவலையைப் பற்றியும் அரசு தனிக் கவனம் கொள்ள வேண்டும். தமிழகத்தில் எந்தத் திட்டமும் நடைபெறக்கூடாது என்பதில் மிகக் கவனமாகவும், மிகக்கொடூரமாகவும் ஒருஇயக்கம் வேலை செய்து கொண்டு இருக்கிறது.

  வளர்ச்சித் திட்டங்களை தடுப்பதில் பயங்கரவாத இயக்கங்களின் பின்னணி உள்ளது. தமிழகஅரசு இந்த விவகாரத்தில் மிகக் கவனமாகச் செயல்பட வேண்டிய காலகட்டம் இது. ஜனநாயகத்தை மீறிய ஒருசக்தி தமிழகத்தில் வந்து கொண்டு இருக்கிறது. யாரால் அவர்களுக்கு ஆபத்துவருகிறதோ அவர்கள் இந்தச் செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் உள்ளப் பூர்வமான ஆய்வை நடத்தி தடுக்ககூடிய நடவடிக்கையை எடுக்கவேண்டும். பாதிப்பு இல்லை என்றால் மக்களுக்காக இருக்கக்கூடிய அரசு பாதிப்பு ஏற்படாதவகையில் பார்க்கக்கூடியது கடமை, உத்தரவாதம் அளிக்கிறோம் எனக்கூற வேண்டியது அரசின் பொறுப்பு" என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முள்ளங்கியின் மருத்துவக் குணம்

முள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் எளிதில் ...

ரோஜாப் பூவின் மருத்துவக் குணம்

ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ...

வேப்பம் பூவின் மருத்துவக் குணம்

வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ...