கோவில் நிலங்களை யாரும் ஆக்கிரமிப்புசெய்ய முடியாது

அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி 4 மாணவிகளை பாலியலுக்கு அழைப்பது போல் செல்போனில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த விவகாரத்தில் கவர்னரை தொடர்புபடுத்தி அரசியல்கட்சிகள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து அவர் பதவி விலகவேண்டும் என்று கோரி வருகின்றன.


இதற்கு பதில் தெரிவிக்கும் வகையில் கவர்னர் பன்வாரிலால் நேற்று நிருபர்களை சந்தித்து பேட்டிஅளித்தார். அவர் கூறுகையில், “பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தை விசாரிப்பதற்காக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர்.சந்தானம் தலைமையில் ஒருநபர் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் குற்றவாளிகள் தண்டிக்கப் படுவது உறுதி.

பல்கலைக்கழக வேந்தர் என்ற முறையில் கவர்னருக்கு அந்த பல்கலைக் கழகங்களின் மீது தனி அதிகாரம் உண்டு. பேராசிரியையின் முகத்தை கூட நான்பார்த்தது இல்லை என்று கூறினார்.

பூந்தமல்லியை அடுத்த பழஞ்சூர் காசி விசாலாட்சி விஸ்வநாதர் ஆலயத்திற்கு எச்.ராஜா தரிசனம் செய்ய வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பல்கலைக்கழக உரிமையில் தலையிட மாநிலஅரசுக்கு எந்த அதிகாரமும் கிடையாது. கவர்னர் தனது பணியை முறையாக செய்துவருகிறார். பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் கவர்னர் அதிகாரவரம்பிற்கு உட்பட்டு செயல்படுகிறார்.

காவிரி நீரி விவகாரத்தில் தமிழகத்திற்கு மத்திய அரசு உதவவிரும்புகிறது. ஆனால் விதிகள் மாநில பட்டியலில் இருப்பதால் உதவுவதில் முட்டுக்கட்டை ஏற்படுகிறது.

இந்துசமய அறநிலையத் துறை மற்றும் வருவாய்த் துறையின் கூட்டு சதியால் கோவில் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுகிறது. தமிழகத்தில் கோவில்நிலங்களை அறநிலையத்துறை நிர்வகிக்க முடியவில்லை என்றால் விட்டு செல்லவும், தமிழகத்தில் உள்ள கோவில் சொத்துக்களை முறையாக பராமரித்தாலே ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம்கோடி வருவாய் கிடைக்கும். இதன் மூலம் கல்வி மற்றும் மருத்துவத்தை இலவசமாக வழங்கலாம்.

கோவில் நிலங்களில் வசிப்பவர் களுக்கு பட்டா வழங்கப்படும் என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறியுள்ளதை கண்டிக்கிறேன். சட்டம்தெளிவாக உள்ளது. கோவில் நிலங்களை யாரும் ஆக்கிரமிப்புசெய்ய முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஜலதோஷம் குணமாக

கடுகு, திப்பிலி, சீரகம், மிளகு மற்றும் சுக்கு இவற்றில் சிறிதளவு எடுத்து கொள்ள ...

தர்ப்பூசணியின் மருத்துவக் குணம்

வயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் கோளாறுகளையும், சிறுநீர்ப்பைக் ...

முருங்கை கீரை , முருங்கை கீரையின் மருத்துவ குணம்

முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ...