நான் எனது பணியை திருப்தியாக செய்துள்ளேன்

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவிநீக்கம் செய்யக் கோரி காங்கிரஸ் தலைமையில் 7 எதிர்க் கட்சிகள், மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடுவிடம் கடந்த வெள்ளிக் கிழமை நோட்டீஸ் கொடுத்தன. இதை கடந்த திங்கட் கிழமை அவர் நிராகரித்தார். இது அவசரகதியில் எடுக்கப்பட்ட சட்டவிரோத நடவடிக்கை என காங்கிரஸ் குற்றம்சாட்டியது. இந்நிலையில் பதவிநீக்க தீர்மான நோட்டீஸ் நிராகரத்ததற்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் உச்சநீதிமன்ற வக்கீல்கள் 10 பேர், வெங்கையா நாயுடுவை நேற்று சந்தித்தனர். அவர்களிடம் வெங்கையாநாயுடு கூறியதாவது:

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது எதிர்க் கட்சிகள் பதவி நீக்கதீர்மானம் கொண்டு வர வாய்ப்புள்ளதாக மீடியாக்களில் செய்தி வெளியான திலிருந்து கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக இந்தவிஷயத்தில் அனைத்து விதிமுறைகள், நடைமுறைகள், முன்மாதிரிகள் ஆகியவற்றை நான் நன்கு ஆராய்ந்தேன். இது அவசரமாக எடுக்கப்பட்ட முடிவல்ல. சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவு. நான் எனது பணியை திருப்தியாக செய்துள்ளேன். இதற்கு பாராட்டு தேவைஇல்லை. மாநிலங்களவைத் தலைவர் என்ற முறையில் என்னிடம் எதிர் பார்க்கப்பட்ட பணியை நான் சிறப்பாக செய்துள்ளேன் என்றார்.

இந்தவிவகாரம் தொடர்பாக நிதியமைச்சர் அருண் ஜெட்லி, ‘‘பதவி நீக்க தீர்மானம் கொண்டுவர வலுவான ஆதாரம்தேவை. வதந்திகள், காதால் கேட்கப்பட்டவை எல்லாம் ஆதாரங்களுக்கு மாற்றாக இருக்கமுடியாது. அடிப்படை ஆதாரமில்லாமல் இந்த பதவி நீக்கதீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது’’ என குறிப்பிட்டுள்ளார்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அளித்தபேட்டியில், ‘‘உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிராக பதவிநீக்க தீர்மான நோட்டீஸ் கொடுத்தது தவறு.இந்த நோட்டீஸ் கொடுக்கவேண்டாம் என சோனியா மற்றும் ராகுல் காந்தியிடம் கூறினேன். பதவிநீக்க தீர்மானத்துக்கு நாங்கள் அதரவு தெரிவிக்கவில்லை. நீதித்துறையில் தலையிட எங்கள் கட்சி விரும்பவில்லை’’ என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மலச்சிக்கல் நீங்க உணவு முறைகள்

புரோட்டீன் தினமும் இவர்கள் ஒரு கிலோ எடைக்கு 1கிராம் வீதம் புரோட்டீன் உணவைச் சாப்பிடலாம்.

நீரிழிவுநோய் உடையவர்களுக்குத் தேவைப்படும் உடற்பயிற்சிகள்

நீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் உடையவர்கள் தொடர்ந்து ...

உடல் பலம் பெற

100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ...