கர்நாடகாவில் வெற்றிபெற காங்கிரஸ் பொய் பிரச்சாரம்

கர்நாடகாவில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் கட்சி பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகிறது’ என்று பிரதமர் நரேந்திரமோடி குற்றம் சாட்டியுள்ளார்.

கர்நாடகாவில் அடுத்தமாதம் 12-ஆம்தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், இத்தேர்தலில் போட்டியிடவுள்ள பாஜக வேட்பாளர்கள் மற்றும் நிர்வாகி களிடையே நமோசெயலி (Na MO app) மூலம் பிரதமர் மோடி இன்று பேசினார். அப்போது, அவர் கூறியதாவது:

கர்நாடகாவில் முழு பெரும்பான்மையுடைய அரசு அமைந்தால் மட்டுமே, மாநிலத்தின் தலையெழுத்தை மாற்றமுடியும். சுமார் 30 ஆண்டுகளுக்குப் பின், பாஜக தலைமையில் மத்தியில் முழு பெரும்பான் மையுடைய அரசு அமைந்தது. இதன் காரணமாக, இந்தியாவின் பெருமை உலகளவில் பேசப்படுகிறது.

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் கட்சி பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகிறது. குறிப்பாக, மாநிலத்தில் தொங்கு சட்டப் பேரவை அமையும் என தகவல்கள் பரப்பப்படுகின்றன.  ஜாதி மற்றும் மத ரீதியாக கர்நாடகாவை பிரித்தாள அக்கட்சி முயற்சிக்கிறது.

காங்கிரஸ், குறிப்பிட்ட சமுதாயத்திற்கு பொய்யான வாக்குறுதிகளை லாலிபாப்போல் கொடுக்கிறது. அடுத்த தேர்தலில் வேறொரு சமுதாயத்திற்கு இதேபோல் லாலிபாப்கொடுக்கிறது.

தேர்தல்களில் அடுத்தடுத்த தோல்விகளால் துவண்டுபோயுள்ள காங்கிரஸ் பொய்களைப் பரப்பிவருகிறது. முன்பு காங்கிரஸ் 50 விஷயங்கள் குறித்துப் பேசினால், அதில் 5 – 10 விஷயங்கள் பொய்யானவையாக இருக்கும். தற்போது, அந்த 50 விஷயங்களில் 40 – 45 விஷயங்கள் பொய்யா னவையாக உள்ளன. எஞ்சிய 5 விஷயங்கள் தெளிவற்றவையாக இருக்கும் என்றார் மோடி.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நாடி சுத்தி பயிற்சி

தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ...

பித்த நீர்ப்பை நோய் (பித்தநீர்ப்பை அழற்சி)

பித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று நோய்களின் பாதிப்பு ...

எட்டியின் மருத்துவ குணம்

எட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் ...