ஜி.எஸ்.டி., மூலம், அரசுக்கு, 7.41 லட்சம் கோடி வரவு

கடந்த, 2017 – 18ம் நிதியாண்டில், ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி மூலம், மத்திய அரசுக்கு, 7.41 லட்சம் கோடி ரூபாய் கிடைத்துள்ளது.

இது குறித்து, மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த, 2017 – 18ம் நிதியாண்டின், ஜூலை – மார்ச் வரையிலான காலத்தில், ஜி.எஸ்.டி., மூலம், மத்திய அரசுக்கு, 7.41 லட்சம் கோடி ரூபாய் கிடைத்துள்ளது. இதில், சி.ஜி.எஸ்.டி., மூலம், 1.19 லட்சம் கோடி ரூபாய்; எஸ்.ஜி.எஸ்.டி., மூலம், 1.72 லட்சம் கோடி ரூபாய்; ஐ.ஜி.எஸ்.டி., மூலம், 3.66 லட்சம் கோடி ரூபாய் அடங்கும்.

கடந்த நிதியாண்டின், ஆகஸ்ட் – மார்ச் வரையிலான காலத்தில், ஜி.எஸ்.டி., மூலம், சராசரியாக மாதந்தோறும், 89 ஆயிரத்து, 885 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. மேலும், இந்த எட்டு மாதங்களில், மாநிலங்களுக்கு இழப்பீடாக, 41 ஆயிரத்து, 147 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. கடந்த எட்டு மாதங்களில், ஜி.எஸ்.டி.,யால் மாநிலங்களின் வருவாய் இழப்பு குறைந்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நாடு முழுவதும், 2017 ஜூலை, 1ல், ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி அமலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அதிக சப்தத்துடன் குறட்டை ஆரோக்கியத்துக்கு கேடு

அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ...

சாத்துக்குடியின் மருத்துவக் குணம்

சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ...

இளநீரின் மருத்துவ குணம்

காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ...