ரஜினியும் மோடியும் ஒன்றுசேர்ந்தால் தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கலாம் என 'துக்ளக்' இதழின் ஆசிரியர் : ஆடிட்டர் குருமூர்த்தி தெரிவித் துள்ளார்.
சென்னை நுங்கம் பாக்கத்தில் 'பிக்கி' அமைப்பு சார்பாக நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் 'துக்ளக்' இதழின் ஆசிரியர் : ஆடிட்டர் குரு மூர்த்தி கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசும்பொழுது கூறியதாவது:
அதிமுக அரசுக்கு செயல்பாடு ஒன்று இருப்பதுபோல் தெரியவில்லை; இருந்தால் பார்க்கலாம் .நீட் குறித்து முழுபுரிதல் யாருக்கும் இல்லை என்பதால்தான் போராட்டங்கள் நடைபெற்றுவருகிறது. ரஜினிக்கு நான் ஆலோசகராக உள்ளேன் என்று கூறப்படுவது உண்மையாக இருந்தால் எனக்குப்பெருமைதான்.
தமிழகத்தில் உள்ள வெற்றிடத்தை ரஜினிகாந்த் நிரப்புவார் என நம்புகிறேன்.ரஜினியும் மோடியும் ஒன்றுசேர்ந்தால் தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கலாம். கர்நாடக தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது என நம்புகிறேன் காவிரி பிரச்னையில் வேறுசிந்தனையுடைய கர்நாடகா, கேரளா பேசி முடிவுக்குவர வேண்டும். கர்நாடக தேர்தலை கருதி காவிரி திட்டவரைவை தாக்கல்செய்ய உச்சநீதிமன்றம் அவகாசம் வழங்கியது நல்லது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ... |
வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ... |
இயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் , சில ... |
Leave a Reply
You must be logged in to post a comment.