பாகிஸ்தானில் இருந்துவந்த, 90 ஹிந்துக்களுக்கு இந்திய குடியுரிமை

பாகிஸ்தானில் இருந்துவந்த, 90 ஹிந்துக்களுக்கு, குஜராத் மாநிலத்தில் நடந்தவிழாவில், இந்திய குடியுரிமை வழங்கப்பட்டது.குஜராத்தில், முதல்வர், விஜய் ரூபானி தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கனில் வசித்த, ஹிந்துக்கள் மற்றும் சீக்கியர்கள், பெரும்பான்மை முஸ்லிம்களால் அதிகளவில் பாதிக்கப் பட்டனர். அவர்களது உயிருக்கும், உடைமைக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டதால், அங்கிருந்து வெளியேறி, நம்நாட்டில் தஞ்சமடைந்தனர்.

நீண்ட காலமாக, நம் நாட்டில் வசிக்கும் இவர்கள், இந்திய குடியுரிமைகோரி விண்ணப்பித்தனர். கடந்த, 2016ல், இவர்களுக்கு குடியுரிமை வழங்கும் நடைமுறையில், மத்தியஅரசு மாற்றம் செய்தது. இதையடுத்து, அரசி தழில் குறிப்பாணை வெளியிடப்பட்டது. இதன்படி, குஜராத்தின் ஆமதாபாத், காந்திநகர் மற்றும் கட்ச் மாவட்ட கலெக்டர் களுக்கு, அந்தந்த மாவட்டங்களில் வசிக்கும், பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கனை சேர்ந்த ஹிந்துக்கள் மற்றும் சீக்கிய சிறுபான்மை யினருக்கு, குடியுரிமை சான்றிதழ் வழங்கும் அதிகாரம் வழங்கப் பட்டது.இதையடுத்து, ஆமதாபாதில் நேற்று நடந்தவிழாவில், 90 பேருக்கு, இந்திய குடியுரிமை சான்றிதழ் வழங்கப் பட்டது.இந்திய குடியுரிமைபெற்ற இவர்கள், ஆதார், பாஸ்போர்ட் உள்ளிட்ட பயன்களை பெறலாம். வாக்காளர் பட்டியலில் தங்கள்பெயர்களை பதிவு செய்யலாம்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கர்ப்பிணிகளுக்கு DHA கூடிய பால் மாவு அவசியமா?

அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ...

தண்ணீர் மருத்துவம் ( வாட்டர் தெரஃபி )

தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே  இல்லை. மேலும் தண்ணீர் ...

மூலநோய் குணமாக

தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ...