நீட்நுழைவுத் தேர்வு இனி ஆண்டிற்கு இரு முறை

ஜீ நுழைவுத் தேர்வும், நீட்நுழைவுத் தேர்வும் இனி ஆண்டிற்கு இரு முறை நடைபெறும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை  அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் புதுடெல்லியில் செய்தியார்களிடம் கூறுகையில், ''பொறியியல் கல்லூரியில் சேர்வதற்கான ஜீ தேர்வும், மருத்துவ கல்வி பயில்வதற்கான நீட்தேர்வும் இனி ஆண்டிற்கு இரு முறை நடைபெறும்.

தேசிய சோதனைத் தேர்வு முகமை இந்த ஆண்டு தேர்வுகளை நடத்தும். ஆண்டிற்கு இருமுறை நடக்கும் இத்தேர்வில் முதன்முறை பங்கேற்ற மாணவர்கள் அடுத்த முறையும் பங்கேற்கலாம்.

எது சிறந்த மதிப்பெண்ணோ அது கணக்கிடப்படும். தேசிய சோதனைத்தேர்வு முகமையின் கீழ் நடைபெறும் அனைத்துத் தேர்வுகளும் இனி கணினியை அடிப்படையாக கொண்டே நடைபெறும்.

கம்ப்யூட்டர் அணுக வசதியற்றவர்களுக்கென்று ஆகஸ்ட் இறுதியில் அல்லது செப்டம்பரில் கம்ப்யூட்டர் மையங்களில் பயிற்சி அமைக்கப்படும்'' என்று பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.

சமீபத்தில் நடந்து முடிந்த நீட்தேர்வில் மட்டும் தமிழத்தை சேர்ந்த 1 லட்சத்து 7 ஆயிரத்து 288 மாணவர்கள் பங்கேற்றனர். இதில் சோதனை பயிற்சிகளில் ஈடுபட்டவர்கள் இதுநாள் வரை டெஸ்ட் புக்லெட்களில் விண்ணப்பதாரர்கள் எழுதி வந்தனர். தற்போது அதில் மாற்றம் ஏற்பட்டு முற்றிலும் கணினிமயம் என்று மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உத ...

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உதவுகிறார் – யோகி ஆதித்யநாத் ராகுல் காந்தி ஒரு 'சோதனை மாதிரி' என்றும் பாஜகவின் ...

பாஜக – அதிமுக கூட்டணி உறுதி ஜே ...

பாஜக – அதிமுக கூட்டணி உறுதி ஜேபி நட்டாவையும் சந்நதித்த பழனிசாமி 2026-ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக தலைமையிலான ...

அ. தி மு க , பாஜக கூட்டணி – விளக் ...

அ. தி மு க ,  பாஜக கூட்டணி – விளக்கமளித்த பழனிசாமி அதிமுக - பாஜக கூட்டணி தொடர்பான கேள்விக்கு அதிமுக ...

பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிர ...

பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிரதமர் மோடி ஏப்ரல் 6 ல் திறந்து வைக்கிறார் பாம்பன் புதிய ரயில் பாலம் வரும் ஏப்ரல் 6ம் ...

பிரிவினை வாதத்துடனான உறவுகளை க ...

பிரிவினை வாதத்துடனான உறவுகளை கைவிடும் இயக்கங்கள் ஜம்மு-காஷ்மீர் இயக்கம், ஜனநாயக அரசியல்இயக்கம் பிரிவினை வாதத்துடனான அனைத்து ...

ஜூன்மாதம் முதல் 5ஜி சேவை தொடங்க ...

ஜூன்மாதம் முதல் 5ஜி சேவை தொடங்கும் கூடுதலாக 25 ஆயிரம் டவர்கள் மத்திய அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி சேவை ...

மருத்துவ செய்திகள்

ஆரஞ்சு பழத்தின் மருத்துவக் குணம்

ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ...

காக்கை வலிப்பு குணமாக

சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ...

வெயில் காலத்தில் குழந்தை பராமரிப்பு

சரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு உள்ளாகிறார்கள் ...