பாதிரியார் ஜான்சன் வி.மேத்யூ நேற்று கைது

கேரளாவில் 4 பாதிரியார்களுக்கு எதிரான பாலியல்பலாத்கார வழக்கில் பாதிரியார் ஜான்சன் வி.மேத்யூ நேற்று  கைது செய்யப் பட்டார். இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்ட 2-வது பாதிரியார் இவர் ஆவார்.

கேரளாவின் கோட்டயம் பகுதியில் மலங்கரா ஆர்தோடக்ஸ் சிரியன் தேவாலயம் உள்ளது. பாவ மன்னிப்பு கேட்ட பெண் ஒருவரை மிரட்டி, 5 பாதிரியார்கள் நீண்டகாலமாக பாலியல் பலாத்காரம் செய்துவந்ததாக புகார் எழுந்துள்ளது. இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக அப்பெண்ணின் வாக்குமூலத்தை தொடர்ந்து, 4 பாதிரியார்களுக்கு எதிராக கேரளபோலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த 4 பாதிரியார்களில் மூவரின் முன்ஜாமீன் மனுவை கேரளநீதிமன்றம் கடந்த புதன்கிழமை நிராகரித்தது. இதையடுத்து இவர்களில் பாதிரியார் ஜாப் மேத்யூ என்பவர் போலீஸாரிடம் நேற்றுமுன்தினம் சரணடைந்தார். பின்னர் இவர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார்.

இந்நிலையில் ஜான்சன் வி. மேத்யூ என்ற பாதிரியாரை திருவல்லா அருகே ஒருவீட்டில் போலீஸார் நேற்று கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

“இவர்மீது  பாலியல் பலாத்கார வழக்கு  பதிவு செய்யப்படவில்லை. ஆனால் மானபங்க வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது”  என போலீஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் இந்தவழக்கில் ஆப்ரகாம் வர்கீஸ் என்கிற சோனி, ஜேஸ் கே.ஜார்ஜ் ஆகிய 2 பாதிரியார்கள் தொடர்ந்து தலை மறைவாக உள்ளனர். இவர்கள் முன்ஜாமீன் கேட்டு உச்சநீதிமன்றத்தை அணுக உள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்

வெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் பவர்கள் பருமனாகலாம். ...

குடல்வால் தேவையா?

மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ...

பட்டினிச் சிகிச்சை

இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ...