‘எஸ் – 400’ ரக ஏவுகணைவாங்க ரஷ்யாவுடன் விரைவில் ஒப்பந்தம்

ரஷ்யாவிடம் இருந்து, 'எஸ் – -400' ரக ஏவுகணையை கொள்முதல்செய்வது தொடர்பாக நடத்திவந்த பேச்சு, இறுதிக் கட்டத்தை எட்டிஉள்ளது. ''விரைவில் இரு நாடுகளிடையே ஒப்பந்தம் கையெழுத்தாகும்,'' என, ராணுவ அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.


சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் அச்சுறுத் தல்களை எதிர்கொள்ள, ரஷ்யாவிடம் இருந்து, அதிநவீன, எஸ் — 400 ரக ஏவுகணைகளை வாங்க, அந்தநாட்டுடன், மத்திய அரசு அதிகாரிகள் பேச்சு நடத்திவந்தனர்.இதற்கிடையில், 'ரஷ்யாவிடம் ராணுவ தளவாடங்களை வாங்கும் நாடுகள், தடைசெய்யப்பட்ட பட்டியலின் கீழ் சேர்க்கப்படும்' என, அமெரிக்கா எச்சரிக்கை விடுத்தது. இது தொடர்பாக, அமெரிக்க பார்லிமென்டில், சட்டமும்

நிறைவேற்றப்பட்டது.இதுபற்றி ஆலோசிக்க, பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்யாவுக்கு சமீபத்தில் சென்று, அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடினைச் சந்தித்துப்பேசினார். அமெரிக்க நடவடிக்கையை எதிர்கொள்வது குறித்து, இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.


இந்நிலையில், டில்லியில், ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:ரஷ்யாவிடம் இருந்து, எஸ் – 400 ரக ஏவுகணையை கொள்முதல் செய்வதற்கான பேச்சு, முடிவடைந்துவிட்டது. விரைவில், இதுதொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகும்.ரஷ்யாவிடமிருந்து, ராணுவ தளவாடங்கள் வாங்குவதற்கு எதிர்ப்புதெரிவித்து, அமெரிக்கா நிறைவேற்றியுள்ள சட்டம் பற்றி கவலை யில்லை. ரஷ்யாவுடனான நம் ராணுவ உறவு, பல ஆண்டுகளாக நீடித்துவருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நன்னாரியின் மருத்துவ குணம்

நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ...

வாய் துர்நாற்றம் நீங்க

ஒரு சிலர் வாயை திறந்தாலே நமக்கு தலை சுற்றி மயக்கமே வந்துவிடும் . ...

பழங்களை பயன்படுத்தும் முறை

பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ...