தமிழ்நாட்டில் பாலாறு-பெண்ணையாறு இணைப்பு திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்

தமிழ்நாட்டின் நிலத்தடி நீர் வளத்தை அதிகரிக்க பாலாறு மற்றும் பெண்ணையாறு நதி நீர் இணைப்புத் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உற்பத்தி யாகும் பாலாறு, பெண்ணாறு ஆகியவை வங்கக் கடலில் போய் சங்கமிக் கின்றன. கடலில் வீணாகும் நீரை திசை திருப்பி பயன்படுத்த ஆறு ஆண்டுகளாக நடத்திய ஆய்வுகளுக்குப்பின் மத்திய நீர்வளத் துறை அமைச்சகம் தமிழக அரசுக்கு பாலாறு -பெண்ணையாறு இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றக் கோரி பரிந்துரைசெய்து , அறிக்கையை அளித்துள்ளது.

இதற்காக 648 கோடி ரூபாய் மதிப்பில் இத்திட்டம் நிறைவேற்றப்பட மத்திய அரசு தேசியநீர்வள ஆணையத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

பாலாறு 50 குடிநீர்த் திட்டங்களுக்கு ஆதாரமாக உள்ளது. தாம்பரம், பல்லாவரம் ஆகிய பகுதிகளும் இதில் உள்ளடக்கம். இத்திட்டத்தின் மூலம் வெள்ளப்பெருக்கு காலங்களில் பெண்ணையாற்றில் இருந்து 3 டிஎம்சி உபரிநீர் பாலாற்றில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இணைப்புக்கால்வாய் வழியாக திருப்பிவிடப்படும்.

இத்திட்டத்தால் சுமார் ஒன்றரை லட்சம் பேருக்கு குடிநீர் வசதி மற்றும் 9 ஆயிரத்து 850 ஹெக்டர் நிலங்களுக்கு பாசன வசதி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

காயகல்ப மூலிகைகள்

வல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, வில்வம், துளசி, ...

குப்பைமேனியின் மருத்துவ குணம்

குப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் சிறிதளவு உப்புச் ...

நீரிழிவுநோய் உடையவர்களுக்குத் தேவைப்படும் உடற்பயிற்சிகள்

நீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் உடையவர்கள் தொடர்ந்து ...