ஆயுஷ்மான் பாரத் தேசியசுகாதார பாதுகாப்பு திட்டத்தை (AB-NHPS) சுதந்திர தினத்தன்று சோதனை முயற்சியாக பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைக்க இருக்கிறார். இது முதலில் சிலமாநிலங்களில் மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டு பின்னர் செப்டம்பர் மாத இறுதியில் முழுமையாக செயல் படுத்தப்படும் என்று இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
10கோடிக்கும் மேற்பட்ட ஏழைக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 5 இலட்சம் ரூபாய்க்கான காப்பீடு வழங்கும் வகையில் இத்திட்டம் வடிமைக்கப்பட்டுள்ளது.
கிராமப்புறங்களில் உள்ள ஏழை எளியோரையும் நகரங்களிலுள்ள (அடையாளம் காணப்பட்ட துறைகளில்) ஏழைப் பணியாளர்களின் குடும்பங்களையும் மனதில் வைத்து இத்திட்டம் தொடங்கப் படுகிறது. இதன்மூலம் கிராமப்பகுதிகளில் 8.03கோடி குடும்பங்களும் 2.33 கோடி நகர்ப்பகுதி குடும்பங்களும் மொத்தத்தில் ஐம்பது கோடி மக்கள் பயன்பெறுவர்.
இதுகுறித்து தகவல் தெரிவித்த ஓர் அரசு அலுவலர், “சுதந்திர நாள் உரையில் இது குறித்த அறிவிப்பை பிரதமர் வெளியிடுவார். மேலும் தொடக்கத்தில் சோதனை முறையாக ஒருசில மாநிலங்களில் இது உடனடியாகத் தொடங்கப்படலாம். கேரளா, பஞ்சாப், மகாராஷ்டிரா, கர்நாடகா, டெல்லி ஆகிய மாநிலங்கள் இத்திட்டத்தில் சேர ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ள நிலையில் ஒதிசா இத்திட்டத்தை நிராகரித்துள்ளது. இதுவரை 22 மாநிலங்கள் நம்பிக்கை அடிப்படையில் இத்திட்டத்தைச் செயல்படுத்த ஒப்புக்கொண்டுள்ளன. இத்திட்டத்துக்காக மத்திய அரசு 10000 கோடி ஒதுக்கீடுசெய்துள்ளது. உலகின் மிகப்பெரிய அளவிலான அரசாங்க மருத்துவ காப்பீட்டு திட்டம் இதுவேயாகும்” என்று கூறினார்.
இத்திட்டத்தில் 1354 பேக்கேஜுகளை அரசு சேர்த்துள்ளது. இதன் கீழ் பைபாஸ் இதய அறுவை சிகிச்சை, முழங்கால் மாற்று சிகிச்சை, இரத்தக் குழாய் சிகிச்சை ஆகியவை மத்திய அரசு மருத்துவ திட்டத்தின் செலவில் 15-20% வரை குறைவாக ஆகும்.
இதன் பயனாளிகளுக்கு QR கோடுடன் கூடியகடிதம் அளிக்கப்படும். உதவி மையங்கள் மருத்துவமனைகளில் அமைக்கப்படும். நோயாளிகளுக்கு உதவ பிரதிநிதிகளும் நியமிக்கப்படுவர்.
No-1. முதற்கட்டமாக கிராமப்புற மக்கள் மற்றும் நகர்ப்புறகூலி தொழிலாளர்கள் உட்பட 10.74 கோடி மக்களுக்கு இதனைக் கொடுப்பதென முடிவு செய்யப்பட்டுள்ளது.
No-2. வங்கி கணக்கு வைத்திருக்கும் 70 வயதுக்குட்பட்டு இருப்பவர்கள் யாராக இருந்தாலும் இந்ததிட்டத்தில் இணைந்து கொள்ளலாம்
No-3. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் குடும்பம் ஒன்றுக்கு, ஆண்டுக்கு, ஐந்து லட்சம் ரூபாய் வரை, மருத்துவ காப்பீடு பெற முடியும்.
ஆண்டிற்க்கு ₹1000.00 ப்ரீமியம் செலுத்தவேண்டும்.
No-4.பணம் செலுத்தாமலேயே, நாட்டின் எந்தபகுதியிலும் உள்ள, தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம்.
No-5.இத்திட்டத்தின் கீழ், 100 நோய்களுக்குமேல் சிகிச்சையளிக்கப்படும்…
No-6.தடுக்கக் கூடிய 70 நோய்களுக்கும், மற்றும் புற்று நோய், இதய நோய் போன்ற, ஆபத்து மிக்க, 30 நோய்களுக்கு கட்டாயம் சிகிச்சையளிக்கப்படும்….
No-7. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் பயனாளியாக இணைய ஆதார் அவசியமில்லை என மத்திய சுகாதாரத்துறை தெறிவித்துள்ளது. இந்திய அரசால் அங்கிகரிக்கப்பட்ட எந்த அடையாள அட்டையாக இருந்தாலும் இத்திட்டத்தில் பயனாளியாக இணைய முடியும்….
You must be logged in to post a comment.
உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ... |
மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது. |
அருமையான கட்டுரை