தேச நலன் அரசியலுக்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும்:

மஹாராஷ்டிராவில் உள்ள பீமாகோரேகான் விவகாரத்தில் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில் மாவோயிஸ சிந்தனை எழுத்தாளர் வராவரராவ், பத்திரிகையாளர் குர்மநாத் கிராந்தி, புகைப்படக் கலைஞர் கிராந்தி, வழக்கறிஞர் சுதா பரத்வராஜ் மற்றும் செய்தியாளர் ஒருவர் உட்பட 5 பேர் செவ்வாய் கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். 

மேலும், முன்னாள் பிரதமர் ராஜீவை கொன்றது போன்று பிரதமர் மோடியையும் கொல்ல சதிதிட்டம் தீட்டப்பட்டது அம்பலமானது. இது தொடர்பான சோதனைகளில் லேப்-டாப் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் இருந்த தகவல்களின் அடிப்படையில் இவர்கள் பிரதமர் மோடியை கொல்ல சதித் திட்டம் தீட்டியது அம்பலமானது.

மாவோயிஸ சிந்தனை எழுத்தாளர் வராவர ராவ், பத்திரிகையாளர் குர்மநாத் கிராந்தி ஆகியோருக்கு தடை செய்யப்பட்டுள்ள மாவோயிஸ்ட்களுடன் தொடர்பு இருப்பதும் தெரியவந்துள்ளது. 

இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது:

இந்தியாவிலேயே ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு மட்டும்தான் அனுமதி உள்ளது. இதர அனைத்து அமைப்புகளையும் மூடவேண்டியது தான். அந்த அமைப்புகளின் போராளிகளை கைதுசெய்ய வேண்டியதுதான். புதிய இந்தியாவுக்கு வரவேற்கிறேன் என்று விமர்சித்திருந்தார்.

இதற்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜுஜு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலடி அளித்துள்ளார். அதில், உள்நாட்டுப் பாதுகாப்புக்கு மாவோயிஸ்டுகளால் தான் மிகப் பெரிய அச்சுறுத்தல் இருப்பதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

ஆனால் தற்போது காங்கிரஸ் தலைவர் ராகுல், மாவோயிஸ்டு அமைப்புக்கு வெளிப்படையாக ஆதரவுதெரிவிக்கிறார். அவர்களுக்காக அனுதாபப் படுகிறார். தேசநலன் அரசியலுக்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பித்த நீர்ப்பை நோய் (பித்தநீர்ப்பை அழற்சி)

பித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று நோய்களின் பாதிப்பு ...

துளசியின் மருத்துவக் குணம்

எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ...

உளுந்தின் மருத்துவக் குணம்

இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ...