வாஜ்பாய் கண்ணியமிக்க அரசியல் வாதி

கட்சியின் முடிவுகளை ஏற்றுக்கொண்டு, அதனையே எப்போதும் எதிரொலித்தவர் வாஜ்பாய் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் புகழாரம் சூட்டினார். 
வாஜ்பாய் மறைவுக்கு இரங்கல்தெரிவித்து நடைபெற்ற புகழ் அஞ்சலி நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் பேசியது: 


நாட்டின் தலைசிறந்தப் பேச்சாளராகவும், காங்கிரஸ் அல்லாத முதல் பிரதமராகவும் வாஜ்பாய் விளங்கினார். மிகச்சிறப்பு வாய்ந்த கவிஞராகவும், மனித நேயம் கொண்ட வராகவும் திகழ்ந்தார். கடந்த 1985-1990ஆம் ஆண்டு கால கட்டத்தில் பாஜக வெறும் 2 எம்.பி.க்களை மட்டுமே பெற்று மிகமோசமான நிலையில் இருந்தது. ஆனால், வாஜ்பாய் எங்களுக்கு வழிகாட்டியதுடன், ஊக்கமளித்து, கடின உழைப்பை செலுத்தியதால் ஆட்சியை பிடிக்கமுடிந்தது.
அவர் கண்ணியமிக்க கட்சிப் பணியாளராகவும் விளங்கினார். கட்சித்தலைமை ஏதாவது முடிவை எடுத்தால், அதனை அப்படியே ஏற்றுக்கொண்டு செயல்படுத்தினார். 


கட்சியின் குரலையே எப்போதும் எதிரொ லித்தார். தங்க நாற்கரச் சாலைத் திட்டத்தின் மூலம் சாலைகளையும், உள்அழைப்புகளுக்கான கட்டணத்தை இலவசமாக்கி தொலை தொடர்புகளையும் இணைத்தார். விமான நிலையங்கள், நதிகள் ஆகியவற்றையும் இணைக்க தொடர்ந்து பணியாற்றினார். சிலநதிகளை இணைத்து நாட்டு மக்களின் தாகம் தீர்த்தார். அவர் அனைத்து மொழிகள் மீதும் அளவற்ற அன்பினை கொண்டிருந்தார். 


இதனால், அந்தமொழிகள் செழுமை பெற்றன. கொள்கை ரீதியாக மாற்றுக் கட்சியினருடன் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அவர்களை பெரிதும் மதித்தார். ஒரு போதும் அவர்களை தனிப்பட்ட முறையில் தாக்கியது இல்லை. மிகவும் கண்ணியமிக்க அரசியல் வாதியாக திகழ்ந்தார் என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

தண்ணீர் மருத்துவம் ( வாட்டர் தெரஃபி )

தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே  இல்லை. மேலும் தண்ணீர் ...

மல்லிகைப் பூவின் மருத்துவக் குணம்

மல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்ணெரிச்சல் நீங்குவதுடன், ...

இளநீரின் மருத்துவ குணம்

காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ...