பாசிச கட்சி என்றால் அது தி.மு.க. தான்

கே: திமுக. தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப் பேற்ற பிறகு சமீபகாலமாக பா.ஜ.க.,வை அதிகம் அவர் விமர்சிக்கிறாரே?

ப: தலைவர் என்றமுறையில் எதையாவது கூறவேண்டும் என நினைக்கிறார். ஆனால் பாசிச ஆட்சி என பா.ஜ.க.,வை விமர்சிப்பது தவறு. பாசிசகட்சி என்றால் அது தி.மு.க. தான்.

கே: விமானத்தில் நடந்த பிரச்சனையில் சோபியாவை கைதுசெய்தது தவறு என மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க் கட்சியினர் கூறியிருக் கிறார்களே?

ப: விமானத்தில் பயணம் செய்யும் போது கடைபிடிக்க வேண்டிய வி‌ஷயங்களை அனைவரும் கடைபிடிக்க வேண்டும். நாங்கள் எங்களை விமர்சனம் செய்யக் கூடாது என கூறவில்லை. எங்களை தொந்தரவு செய்யாமல் விமர்சனம் செய்யுங்கள் என்று தான் கூறுகிறோம்.

கே: மு.க.ஸ்டாலின் நானும் பா.ஜனதா ஒழிக என்று கூறுகிறேன் என்னை கைதுசெய்யுங்கள் என்று கூறியிருக்கிறாரே?
 

ப: பா.ஜனதா ஒழிக என்று தி.மு.க. கூறுவதில் ஒன்றும் அதிசயம்இல்லை. முதலில் தி.மு.க. அழியாமல் காப்பாற்ற ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும். நேற்று சென்னையில் மு.க.அழகிரி நடத்திய பேரணி தமிழக அரசியலையே திரும்பி பார்க்கவைத்துள்ளது.
 

கே: அழகிரியை பாஜனதா இயக்குவதாக கூறப்படுகிறதே?

ப: நாங்கள் யாரையும் இயக்க வில்லை. யாரையும் வளர்க்க விரும்பவில்லை. நாங்கள் எங்கள் கட்சியை வளர்க்கத் தான் நினைக்கிறோம். அழகிரி தி.மு.க.வில் மூத்த தலைவர். திமுக.வில் இருந்தவர் அவர்பேரணி நடத்தியுள்ளார். இது அவர்கள் பிரச்சனை. முதலில் ஸ்டாலின் இதை பார்த்துக்கொள்ளட்டும். ஆனால் சமீப காலமாக தி.மு.க.வை பா.ஜனதா இயக்குகிறது, அ.தி.மு.க.வை இயக்குகிறது என்று கூறுகிறார்கள். ஒன்றுமட்டும் நிச்சயம். அவனின்றி எதுவும் அசையாது என்பதுபோல, பா.ஜனதா இல்லாமல் தமிழகத்தில் அரசியல்செய்ய முடியாது என்ற வகையில் நாங்கள் வளர்ந்து வருகிறோம்.

கே: தற்போது சிபிஐ. சோதனை அடிக்கடி நடக்கிறது. ஆனால் சேகர்ரெட்டி, அன்பு நாதன் போன்ற சி.பி.ஐ. சோதனையில் எந்தமுடிவும் வரவில்லை. இந்தநிலையில் நேற்று 40 இடங்களில் நடந்த சோதனை முடிவு உடனே வருமா?

ப: எந்த சோதனையிலும் முடிவை உடனே எதிர்பார்க்க முடியாது. முழுமையான வி‌ஷயத்தை ஆய்வுசெய்து சரியான முறையில் உச்ச கட்ட நிலையில் சென்று சோதனை நடந்துள்ளது. உடனே இதில் முடிவை எதிர்பார்க்ககூடாது.

கே: பா.ஜனதா அரசு 8 வழிச் சாலைக்கு நிதி உடனே ஒதுக்குகிறது. ஆனால் நதி நீர் பாதையை சரிசெய்ய நிதி ஒதுக்காததால் கடைமடைக்கு தண்ணீர் கிடைக்க வில்லை என குற்றச்சாட்டு உள்ளதே?

ப: மத்திய அரசு கடை மடைக்கு மட்டுமல்ல, கடைக்கோடி வயலுக்கும் தண்ணீர் கிடைக்க வேண்டும் என்று தான் நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழ்நாட்டில் 11 நதிகள் நீர் வழிப்பாதைக்காக தேர்வு செய்யப்பட்டன.

இது தொடர்பாக ஆய்வுசெய்த போது ஒருசில நதிகள் தான் நீர் வழிப்பாதைக்கு பயன்படுத்த முடியும் என்று தெரிய வந்துள்ளது. கோதாவரி நதியை தமிழகத்துடன் இணைத்தால் கடலில் கலக்கும் 2 ஆயிரம் டி.எம்.சி. தண்ணீர் தமிழ்நாட்டிற்கு கிடைக்கும்.

இந்த திட்டத்தை நிறைவேற்றுவது குறித்து ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் நான் பங்கேற்ற கூட்டத்தில் நெடுஞ்சாலை துறை மத்திய அமைச்சர் நிதின் கட்காரி பேசியபோது, இதை நிறைவேற்ற நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். நாமும் ஒரு சொட்டு நீரை கூட வீணாக்ககூடாது.

கே: தமிழக அரசு இது தொடர்பாக மத்திய அரசிடம் ஏதாவது கேட்கிறதா?

ப: நம்மால் முடியாததைதான் மற்றவர்களிடம் கேட்க வேண்டும்.

கே: தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சி நடக்கிறதா?

ப: இதை நீங்கள் என்னிடம் கேட்கிறீர்களா. உங்களுக்கு தெரியாதா?

கே: பா.ஜனதா அரசு மீதும் ஊழல் குற்றச் சாட்டு சுமத்தப்பட்டுள்ளதே? ரபேல் விமானம் ஊழல் குறித்து சர்ச்சை எழுந்துள்ளதே?

ப: இந்த பிரச்சனையில் பாராளுமன்றத்தில் எதிர் கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசி முடித்த சில நிமிடங்களிலேயே பிரான்ஸ் நாட்டு அமைச்சகம் தெளிவான விளக்கங்களை கொடுத்துள்ளது. 2016-ம் ஆண்டிலேயே விலைசம்பந்தமான வி‌ஷயங்கள் தெரிவிக்கப் பட்டுள்ளது. ஒரு வியாபாரத்தில் எந்தவி‌ஷயத்தை வெளியில் கூற முடியுமோ அதைதான் நாம் கூறுவோம். அதேபோல் இது இரண்டு நாடுகளுக்கு இடையே உள்ள ஒப்பந்தம். அதில் எதைவெளியில் கூற முடியுமோ அதை தான் கூறமுடியும். இதில் எந்த ஊழலும் நடைபெறவில்லை.

கே: வெளிநாடுகளுக்கு பெட்ரோலை ரூ.34-க்கு ஏற்றுமதி செய்துவிட்டு, நமது நாட்டில் ரூ.82-க்கு மத்திய அரசு பெட்ரோலைவிற்கிறது என்று குற்றச்சாட்டு கூறப்படுகிறதே?

ப: இதில் முழுமையான விவரம் எனக்கு தெரியவில்லை. எனவே இது குறித்து பதிலளிக்க முடியாது.

கே: மேகதாது அணை கட்ட தமிழக அரசிடம் எந்த அனுமதியும் பெறதேவையில்லை என்று கர்நாடகம் தெரிவித்துள்ளதே?

ப: இது தவறு. ஒரு நதி ஒருமாநிலத்திற்குள் மட்டும் ஓடினால் பிரச்சனை இல்லை. இப்போது தமிழ்நாட்டிற்கு கர்நாடகா தண்ணீர் திறந்துவிட்டதே? அது ஏன். அங்கு அணை உடைந்து விடும் என்பதால் தான் அவர்கள் தண்ணீரை தமிழகத்திற்கு திறந்து விட்டார்கள். தமிழ்நாட்டை வடிகாலாக மட்டும் கர்நாடகா நினைக்க கூடாது.

கே: பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுடன் தி.மு.க. அதி.மு.க.வில் எந்தகட்சி கூட்டணியில் இருக்கும்?

ப: அது தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சர்க்கரை வியாதி

சர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு "இன்சுலின்" சுரப்பதாலோ அல்லது போதுமான இன்சுலின் ...

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு உணவு முறை

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ...

கல்யாண முருங்கை

முள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் கொண்ட மென்மையான ...