கடன் தள்ளுபடி செய்யப்பட மாட்டாது

பொதுத்துறை வங்கிகள், அவற்றின் மொத்தகடனில், குறிப்பிட்ட சதவீதத்தை, வாராக்கடன் பிரிவில் வைப்பது, வழக்கமான வங்கி நடைமுறைதான். அதேநேரத்தில்,அந்த கடன் தள்ளுபடி செய்யப்பட மாட்டாது என மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: பொதுத் துறை வங்கிகளின் வாராக்கடன் தள்ளுபடி என செய்திகள் வெளியாகியுள்ளன. வாராக்கடன்களை தங்களது வரவு-செலவு கணக்கு அறிக்கையில் இருந்துநீக்குவது பொதுத் துறை வங்கிகள் வழக்கமாக கடை பிடிக்கும் நடைமுறை. ரிசர்வ்வங்கி வழிகாட்டுதல்படி இது நடக்கிறது. வரிபயன் மற்றும் மூலதன மேம்பாட்டுக்காக வங்கிகள் இப்படி செய்கின்றன. இதற்கு 'கடன்தள்ளுபடி' என்று அர்த்தம் அல்ல. இந்தகடனை பெற்றவர்கள், அதை திருப்பிச் செலுத்தியே ஆகவேண்டும். கடன்களை வசூலிப்பதில் வங்கிகள் தீவிரமாக நடவடிக்கை எடுத்துவருகின்றன.

2014ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்தபோது, பொதுத் துறை வங்கிகளுக்கு ஏராளமான வாராக் கடன்கள் இருந்தன. 2008 முதல் 2014 வரை விதிகளை மீறி அதிகளவு கடன்கொடுத்ததால், 2008 ல் 18 லட்சம் கோடி ரூபாயாக இருந்த வாராக் கடன், 2014 மார்ச்சில் 52 லட்சம் கோடியாக அதிகரித்தது.2018 – 19 நிதியாண்டின் முதல் காலாண்டில், வாராக்கடன்களில் ரூ.36,551 கோடி திரும்ப வசூலிக்கப்பட்டு விட்டது. 2018 – 19 நிதியாண்டில் ரூ.74,562 கோடி கடன் வசூலிக்கப்பட்டு உள்ளது. நடப்பு நிதியாண்டில், ரூ.1 லட்சத்து 81 ஆயிரத்து 34 கோடி வாராக்கடன்களை திரும்ப வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சம்பங்கிப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதை ...

உணவை எளிதில் ஜீரணமாக்கும் பெருங்காயம்

நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ...

கண்களில் எவ்வகைக் கோளாறுகள் ஏற்படுகின்றன?

1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ...