ரஃபேல் பொய்யான விஷமப் பிரச்சாரம்!

ரஃபேல் ஒப்பந்தத்தை பெறவேண்டுமானால்   ரிலையன்ஸ் நிறுவனத்தை   இந்திய பங்குதாரராக  தேர்வு செய்யவேண்டியது கட்டாயம் என  டஸால்ட் நிறுவன ஆவணங்களில் உள்ளது!.

மீடியாபார்ட்  பிரான்ஸ் ( இணையதள) பத்திரிகை!
  
இந்த தகவலை படிக்கும் போது ரஃபேல்  ஒப்பந்தத்தைப் பெறவேண்டும் என்றால்  ரிலையன்ஸ் நிறுவனத்தை பங்குதாரராக  இணைத்துக் கொண்டாக வேண்டும் என  மோடி அரசு கட்டாயப்படுத்தி இருக்கிறது  என்ற எண்ணமே உண்டாகும்!
 
ஆனால்  உண்மை அதுவல்ல!  கௌரவமாக சொன்னால்   இது தவறான தகவல்!  பச்சையாக சொன்னால்  பொய்யான விஷமப் பிரச்சாரம்!
 
உண்மை என்னவென்றால்  ரஃபேல் நிறுவனம் போர் விமானங்களை இந்தியாவிற்கு விற்பனை செய்கிறது!  அந்த விற்பனை மூலம் கிடைக்கக் கூடிய  தொகையில் 50 சதவீத தொகைக்கு  Make in India திட்டத்தின் கீழ் அந்த நிறுவன   உற்பத்திக்கு இந்தியாவில்   முதலீடு செய்ய வேண்டும்! அதற்கு இந்தியாவில் தொழிற்சாலை  நிறுவ வேண்டும்!
 
அப்படி செய்தால்   பிரான்ஸ் நாட்டினருக்கு கிடைக்கவேண்டிய  வேலை வாய்ப்பில் இழப்பு ஏற்படுகிறது!  அதைப் பற்றி தொழிற்சங்கத்திற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்பது அந்த நாட்டின் சட்டம்!
 
இந்த சூழ்நிலை எதனால் ஏற்பட்டது;  ஏன் தவிர்க்க முடியாது என்பதை  தொழிற்சங்க அமைப்புக்கு தெரிவிக்க   விளக்க வேண்டும்!  அந்த சட்டவிதிகளின் படி   இந்தியா- பிரான்ஸ் இடையிலான ரஃபேல் போர் விமான ஒப்பந்தப்படி  50 சதவீத தொகையை இந்தியாவில்  முதலீடு செய்து உற்பத்தி செய்ய வேண்டும்  என்ற ஷரத்து இருந்தது ; அந்த ஷரத்தை  ஏற்க மறுத்தால் இந்தியா ரஃபேல் விமானங்களை வாங்காது!  அப்படி வாங்கவில்லை என்றால்  பிரான்ஸில் உள்ள ரஃபேல் தொழிற்சாலைக்கு  கிடைக்கும் உற்பத்தி வாய்ப்பு கிடைக்காது!.


அதன் மூலம் தொழிலாளர்களுக்கு கிடைக்கும்  வேலைவாய்ப்பு கிடைக்காது!எனவே  இந்தியாவில் உற்பத்தி செய்வதை தவிர்க்க  முடியாது என்பதை தொழிற்சங்க அமைப்புக்கு என்று டஸால்ட் நிறுவனம் தெரிவித்தது!
 
  அதற்கு அத்தாட்சியாக ஒப்பந்தப் பிரிவின்  நகலையும் இணைத்து அனுப்பி இருக்கிறது!  இதில் எந்த இந்திய நிறுவனத்துடன் டஸால்ட்  நிறுவனம் இணைந்து செயல்படுகிறது என்பது  தொழிற்சங்க அமைப்பின் அக்கறை இல்லை!
 
  டஸால்ட்- தொழிற்சங்க அமைப்பு இடையிலான  இந்த தகவலை தான் மீடியாபார்ட்   செய்தி ஆக்கி இருக்கிறது!
 
 
  ( டஸால்ட் நிறுவனம் இந்தியாவில் போர்  விமானங்களை தயாரிக்கப் போவதில்லை!  வர்த்தக விமானங்களுக்குக்கான பாகங்களை   தயாரிக்கப் போகிறது! அதற்கு 70 க்கும்  அதிகமான இந்திய நிறுவனங்களுடன்   ஒப்பந்தம் செய்து இருக்கிறது! அதற்கு  ரிலையன்ஸ் நிறுவனத்துடன் சேர்ந்து டஸால்ட்ரிலையன் என்ற பெயரில்  ஒரு நிறுவனத்தை துவக்கி இருக்கிறது!)
 
மீடியாபார்ட் இணைய தள இதழ்  இந்திய அரசியல் கட்சி ஒன்றின்   பிரச்சாரத்திற்காக வேலை செய்கிறது என்று  தெளிவாக தெரிகிறது! அந்த அரசியல் கட்சி  எது என்பது ஊரறிந்த ரகசியம் தான்!

நன்றி வசந்தன் பெருமாள்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பள்ளி செல்லுகின்ற குழந்தைகளுக்கான உணவு

பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் அந்தக் குழந்தைகள் ...

கல்லீரல் நோய்கள் (கல்லீரல் அழற்சி)

பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் ...

இம்பூறல் மூலிகையின் மருத்துவக் குணம்

இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ...