வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது பெருமிதம் தருகிறது

பாஜக ஆட்சிமீதான நம்பிக்கை காரணமாக, நாட்டில் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். .

தில்லியில் புதன் கிழமை நடைபெற்ற தகவல் தொழில்நுட்ப பொறியாளர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய மோடி இதைத்தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:


வேகமாக வளர்ந்துவரும் நாடான இந்தியாவின் எதிர்காலம் தொழில்நுட்பத்தின் கைகளில் உள்ளது. இந்ததொழில்நுட்பம், நாடு எதிர்நோக்கியிருக்கும் பிரச்னைகளுக்கு தீர்வுகாணும் வகையில் இருக்க வேண்டும்.


அண்மையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தது. இதனால், இந்தியாவில் பெட்ரோல், டீசல்விலை சற்று அதிகரித்ததால் மக்கள் அவதிக்குள்ளாகினர்.


மின்சார வாகனங்களுக்கு மக்கள் மாறுவதுதான் இந்தப்பிரச்னைக்கு தீர்வாக இருக்கும். ஆகவே, மக்கள் எளிதில் வாங்கக்கூடிய தொகையில், அதிக விலையில்லாத, உடனடியாக சார்ஜ் ஆகக்கூடிய பேட்டரியைக் கொண்ட மின்சார வாகனங்களைத் தயாரிப்பதற்கு உள்நாட்டு நிறுவனங்கள் முன்வர வேண்டும்.


நாட்டில் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை முன்பைவிட தற்போது அதிகரித்துள்ளது. வரி செலுத்தா விட்டால் தண்டனை கிடைக்கும் என்ற அச்சத்தால் அவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. மாறாக, பாஜக அரசின் மீதான நம்பிக்கை காரணமாக, வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதாவது, தாங்கள் செலுத்தும் வரிப் பணம், மக்கள் நலனுக்காக முறையாகப் பயன்படுத்தப் படுகிறது என்று அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கையே அதற்கு காரணமாகும். அவர்களை நான் பாராட்டுகிறேன்.

அரசுக்கு வரி செலுத்துவது நமது ஆட்சி நிர்வாகத்தில் ஓர் அங்கமாகும். ஆனால், அதையும் தாண்டி சமூகப்பொறுப்பும் வரி செலுத்துவோருக்கு இருக்க வேண்டும். நேர்மையாக வரி செலுத்துவது மட்டுமன்றி, தங்களால் இயன்றளவில் சமூகத்துக்கு ஏதாவது செய்யவேண்டும்.


நமது கலாசாரத்தில், தொழில், வர்த்தக நிறுவனங்களை விமர்சிப்பதை மட்டுமே நாம் விரும்புகிறோம். உண்மையில், பலமுன்னணி பன்னாட்டு நிறுவனங்கள், சமூகசேவையில் சிறப்பாக ஈடுபட்டு வருகின்றன. அதுமட்டுமன்றி, தங்களது ஊழியர்களையும் சமூக சேவையில் ஊக்குவித்து வருகின்றன. நாட்டின் எதிர்காலம் தொழில்நுட்பத்தின் கையில் இருந்தாலும், இயற்கை வளங்களை பாதுகாப்பதில் நாம் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.
வேளாண் துறையில் நிறைவேற்ற வேண்டிய பணிகள் ஏராளம் உள்ளன. விவசாயிகளின் நலனுக்காக, புதிய கண்டுபிடிப்புகளை இளைய சமுதாயம் உருவாக்க வேண்டும். நீரை பயன்படுத்துவதில் நாம் அலட்சியமாக இருக்கிறோம். ஆனால், நீரை சிக்கனமாகப் பயன் படுத்துவது, எதிர்காலத் தேவைக்கு பாதுகாப்பது, மறுசுழற்சி செய்வது ஆகியவை அவசியமாகும். தண்ணீர் வீணாவதை தடுக்க விவசாயிகள் சொட்டு நீர்ப்பாசன முறைக்கு மாற வேண்டும்.


பல நேரங்களில் அரசால் செய்யமுடியாததை, மக்களின் பழக்கவழக்கத்தால் செய்துவிட முடியும். அதன்படி, தூய்மை இந்தியா திட்டம், மக்களின் கலாசாரத்தில் ஓர் அங்கமாக மாறவேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ...

தலை முடி உதிர்வதை தடுக்க குறிப்புகள்

முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ...

இளநீரின் மருத்துவ குணம்

காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ...