வேளாண் துறை வளர்ச்சிக்கு நவீன தொழில்நுட்பங்கள் அவசியம்

வேளாண் துறை வளர்ச்சிக்கு நவீன தொழில்நுட்பங்கள் அவசியம் என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்தார்.

உத்தரபிரதேசத் தலைநகர் லக்னோவில் மத்திய அரசு சார்பிலான வேளாண்கண்காட்சி நேற்று தொடங்கியது. இந்த கண்காட்சியை டெல்லியிலிருந்து காணொளி முறை மூலமாக பிரதமர் நரேந்திரமோடி திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:வேளாண் துறையின் வளர்ச்சிக்காகவும், விவசாயிகளின் முன்னேற்றத்துக்காகவும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. வரும் 2022-ம்ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் நோக்கத்துடன் அரசு செயல்பட்டுவருகிறது. அந்த வகையில்,விவசாய இடுபொருட்களின்விலையைக் குறைப்பதற்கும், விவசாயிகள் லாபம் அடைவதற்கும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வேளாண்துறை வளர்ச்சிக்கு நவீன தொழில்நுட்பங்கள் அவசியம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

ஒருதுறை, வளர்ச்சி பெற வேண்டுமானால், அதில் நவீன தொழில் நுட்பங்களின் பயன்பாடு அதிக அளவில் இருக்கவேண்டும். காலத்துக்கு ஏற்றவாறு புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும்.வேளாண் துறைக்கும் இது பொருந்தும். தற்போதைய காலகட்டத்தில் விவசாயத்துக்கு பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் வந்துகொண்டிருக்கின்றன. அந்த தொழில்நுட்பங்களை செயல்படுத்த விவசாயிகள் முன்வரவேண்டும். இதற்கு அரசு உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.

நம் நாட்டில் தற்போது அனைத்து துறைகளிலும் சூரிய மின்bசக்தியின் (சோலார்) பயன்பாடு அதிகரித்து வருகிறது. அதன்படி, சூரிய மின் சக்தியின் மூலம் விவசாயிகளின் தேவையை பூர்த்திசெய்ய அரசு முடிவு செய்துள்ளது. அதன் ஒரு கட்டமாக, எதிர்காலத்தில் நீர்பாசனத்துக்காக சோலார் பைப்புகளை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்கும்.

இவ்வாறு நரேந்திர மோடி பேசினார்.

 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வெங்காயத்தின் மருத்துவக் குணம்

ஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, மூன்று வாரங்களுக்குக் ...

மிளகாயின் மருத்துவக் குணம்

பசி தூண்டியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

காட்டாமணக்கு இலையின் மருத்துவக் குணம்

இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ...