ஐடி ஊழியர்களின் நலனை பாதுகாக்கும் வகையில் அமைப்பு

தெலங்கா னாவில் வரும் டிசம்பர் 7ம் தேதி, சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி பாஜக தேர்தல்வாக்குறுதிகள் குறித்து அறிவித்துள்ளது.

அதன்படி, ‘மாநிலத்தில் இருக்கும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் யோகா-வை அறிமுகப் படுத்துவது, சமஸ்கிரத பல்கலைக் கழகம் ஒன்றை நிறுவுவது, ஐடி ஊழியர்களின் நலனை பாதுகாக்கும் வகையில் அமைப்பு ஒன்றை உருவாக்குவது, மதுபான விற்பனையை முறை படுத்துவது, 1 லட்சம் பசுக்களை ஒவ்வொரு ஆண்டும் மக்களுக்குக்கொடுப்பது, சபரிமலை உள்ளிட்ட ஆன்மீக தலங்களுக்கு இலவசமாக பயணங்கள் ஏற்பாடுசெய்வது' உள்ளிட்ட வாக்குறுதிகள் குறித்து தெரியபடுத்தபட்டுள்ளன.

இதுகுறித்து பாஜக-வின் தேர்தல் வாக்குறுதிகளை வடிவமைக்கும் கமிட்டியின் தலைவர் பிரபாகர், ‘யோகா என்பதை இந்துத்துவ அடையாளத்துடன் பார்க்கக் கூடாது. யோகா மனித ஆரோக்கியத்துக்கு நல்லது. கூடியசீக்கிரம் வாக்குறுதிகள் அதிகாரபூர்வமாக வெளியிடப்படும் என்று' தெரிவித்துள்ளார். 

பிரபாகர் மேலும், ‘தெலங்கானாவில் பெரும் அளவிலான ஐடி ஊழியர்கள் இருக்கின்றனர். அவர்களை பணியிலிருந்து திடீரெனநீக்குவது, அவர்கள் வாங்கிவரும் சம்பளத்தை திடீரென குறைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை எதேச்சதிகார போக்குகளில் நிறுவனங்கள் எடுக்கின்றன. இதற்கு முடிவு கட்டும் நோக்கில் எங்கள் வாக்குறுதி இருக்கும்' என்று கூறியுள்ளார். 

 

கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக, தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டண வைத்து களத்தில் இறங்கியது. இந்த முறை எந்தக் கட்சியுடனும் பாஜக கூட்டணிசேரவில்லை. அடுத்தமாதம் 7 ஆம் தேதி தெலங்கானாவில் தேர்தல் நடக்கிறது. அதைத் தொடர்ந்து டிசம்பர் 11 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

One response to “ஐடி ஊழியர்களின் நலனை பாதுகாக்கும் வகையில் அமைப்பு”

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கல்லீரல் நோய்கள் (கல்லீரல் அழற்சி)

பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் ...

ஓமம் ஒப்பற்ற ஒரு மருந்தாகும்

குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ...

காட்டாமணக்கு இலையின் மருத்துவக் குணம்

இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ...