ஐடி ஊழியர்களின் நலனை பாதுகாக்கும் வகையில் அமைப்பு

தெலங்கா னாவில் வரும் டிசம்பர் 7ம் தேதி, சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி பாஜக தேர்தல்வாக்குறுதிகள் குறித்து அறிவித்துள்ளது.

அதன்படி, ‘மாநிலத்தில் இருக்கும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் யோகா-வை அறிமுகப் படுத்துவது, சமஸ்கிரத பல்கலைக் கழகம் ஒன்றை நிறுவுவது, ஐடி ஊழியர்களின் நலனை பாதுகாக்கும் வகையில் அமைப்பு ஒன்றை உருவாக்குவது, மதுபான விற்பனையை முறை படுத்துவது, 1 லட்சம் பசுக்களை ஒவ்வொரு ஆண்டும் மக்களுக்குக்கொடுப்பது, சபரிமலை உள்ளிட்ட ஆன்மீக தலங்களுக்கு இலவசமாக பயணங்கள் ஏற்பாடுசெய்வது' உள்ளிட்ட வாக்குறுதிகள் குறித்து தெரியபடுத்தபட்டுள்ளன.

இதுகுறித்து பாஜக-வின் தேர்தல் வாக்குறுதிகளை வடிவமைக்கும் கமிட்டியின் தலைவர் பிரபாகர், ‘யோகா என்பதை இந்துத்துவ அடையாளத்துடன் பார்க்கக் கூடாது. யோகா மனித ஆரோக்கியத்துக்கு நல்லது. கூடியசீக்கிரம் வாக்குறுதிகள் அதிகாரபூர்வமாக வெளியிடப்படும் என்று' தெரிவித்துள்ளார். 

பிரபாகர் மேலும், ‘தெலங்கானாவில் பெரும் அளவிலான ஐடி ஊழியர்கள் இருக்கின்றனர். அவர்களை பணியிலிருந்து திடீரெனநீக்குவது, அவர்கள் வாங்கிவரும் சம்பளத்தை திடீரென குறைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை எதேச்சதிகார போக்குகளில் நிறுவனங்கள் எடுக்கின்றன. இதற்கு முடிவு கட்டும் நோக்கில் எங்கள் வாக்குறுதி இருக்கும்' என்று கூறியுள்ளார். 

 

கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக, தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டண வைத்து களத்தில் இறங்கியது. இந்த முறை எந்தக் கட்சியுடனும் பாஜக கூட்டணிசேரவில்லை. அடுத்தமாதம் 7 ஆம் தேதி தெலங்கானாவில் தேர்தல் நடக்கிறது. அதைத் தொடர்ந்து டிசம்பர் 11 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

One response to “ஐடி ஊழியர்களின் நலனை பாதுகாக்கும் வகையில் அமைப்பு”

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை எ ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக � ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக பாஜக நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் விளக்கம் “மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுந ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பீகார் பயணம் இந்தியா- நேபாளம் எல்லையில் பீகார் பகுதியில் இந்திய வான் ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற� ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதம� ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதமர் மோடி வழங்கிய தகவல்களும் அறிவுரை முக்கியமான ஒரு ஆய்வு சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்� ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்கரவாதம்: பிரதமர் மோடி பயங்கரவாதத்தை மறைமுகப் போா் என்பதையும் கடந்து, நன்கு திட்டமிட்ட ...

மருத்துவ செய்திகள்

கருவேல் இலையின் மருத்துவக் குணம்

கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ...

முருங்கைப் பூ, முருங்கை பூவின் மருத்துவ குணம்

முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை பாலில் வேகவைத்து- ...

“தாழ்நிலை சர்க்கரை” – சில செய்திகள் (HYPOGLYCEMIA)

நீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும். ...