தமிழகத்துக்கு அதிகமான நல திட்டங்களை செய்துள்ளோம்

பாரதிய ஜனதா தலைமையிலான மத்திய அரசே தமிழகத்தில் அதிகமான நலத் திட்டங்களை செய்துள்ளது.

“என் வாக்குச்சாவடி, வலுவான வாக்குச்சாவடி” என்ற தலைப்பில் தமிழகத்தில் கோவை, நாமக்கல், கன்னியாகுமரி, சேலம், நீலகிரி ஆகிய மாவட்டங்களின் பாரதிய ஜனதா பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது.,

கடந்த காங்கிரஸ் ஆட்சியைவிட தற்போதைய ஆட்சியில் பணவீக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தமிழக கிராமப்புறங்களில் மத்திய அரசு திட்டத்தின் கீழ் 3 ஆயிரம் கிலோ மீட்டருக்கு அதிகமாக சாலை அமைக்கப்பட்டுள்ளது.. 4 லட்சம் இளைஞர்களுக்கு திறன்மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது, ‘தமிழகத்தில் 12,000 கிராமங்களுக்கு கழிப்பறை கட்டி தரப்பட்டுள்ளது.தமிழகத்தில் உஜ்வாலா திட்டத்தின் மூலம் புகையில்லாத வீடுகள் திட்டத்தில் 27 லட்சம் வீடுகளுக்கு சமையல் எரி வாயு இணைப்பு தரப்பட்டுள்ளது.  பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் மூலம் 4.30 லட்சம் வீடுகள் கட்டிதரப் பட்டுள்ளன’.  விவசாயிகளின்  நலனை கருத்தில்  கொண்டு இதுவரை மத்திய அரசின் சார்பில் 2.11 லட்சம் கோடி கடனாக வழங்கப்பட்டுள்ளது

மத்திய அரசின் ஆயுஷ்மான் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் 3 மாதங்களில் 5 லட்சம் பேர் சிகிச்சை பெற்று பலன் அடைந்துள்ளனர்

முத்ரா திட்டத்தின் கீழ் லட்சக்கணக்கானோருக்கு கடன் அளிக்கப்படுள்ளது.காங்கிரசை பொறுத்தவரை, நாட்டின்பாதுகாப்பு மற்றும் ராணுவத்துறையை, கொள்ளையடிக்கும், சம்பாதிக்கும் ஒரு வழியாகவே பயன்படுத்தி வந்துள்ளது.கடந்த, 1940 மற்றும் 1950களில், ஜீப் ஊழல்; 1980களில், போபர்ஸ் பீரங்கி ஊழல்; சமீபத்தில், ஹெலிகாப்டர் வாங்குவது, நீர்மூழ்கி கப்பல்வாங்குவதில் ஊழல் என, தொடர்ந்து, ராணுவத்துறையில், அந்தக் கட்சி ஊழல் செய்து வந்துள்ளது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது, நம் ராணுவம், ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ எனப்படும் துல்லியதாக்குதல் நடத்தியது. இதற்காக மகிழ்ச்சி, பெருமை அடையவேண்டும். ஆனால், காங்கிரஸ் கேள்வி எழுப்பியது. நாட்டின் பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்பட்டாலும், ராணுவத்தினர் மன உறுதி குலைந்தாலும், அதற்காக காங்கிரஸ் கவலைப் பட்டதில்லை. அந்தத் துறைகளில் எப்படியெல்லாம் பணம் சம்பாதிப்பது, ஊழல்செய்வது என்பதிலேயே அக்கறையுடன் இருந்தது. ஆனால் நாம், ராணுவ வீரர்களை பெருமை கொள்ள செய்துள்ளோம். அவர்களுக்கு தேவையான கருவிகளை வாங்கித் தருகிறோம்.

 

விவசாயிகள் யூரியா உரத்திற்காக போராடிய, காவல்துறையிடம் தடியடி வாங்கிய காலம் போய்விட்டது. இன்று யூரியா உரம் எந்த தட்டுப்பாடும் இன்றி கிடைக்கிறது வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு பகுதிகள் வளர்ச்சி பெற்றால், தேசம் வளர்ச்சி பெறும். நடுத்தர வர்க்கத்தினரை பெரிதும் பாதித்த பண வீக்கம் கட்டுக்குள் உள்ளது. முந்தைய ஆட்சியில் பணவீக்கம் அதிகமாக இருந்தது. முந்தைய ஆட்சியை ஒப்பிடும் போது, தற்போது, கட்டுக்குள் உள்ளது.

பல்வேறு திட்டங்களை பட்டியிலிட்ட மோடி, மத்திய அரசின் திட்டங்கள் எந்தளவிற்கு தெரியும் என நிர்வாகிகளிடம் கேட்டார்.

விவசாயிகளுக்கு மத்திய அரசு செயல்படுத்திய திட்டங்களையும் கேட்டறிந்தார். மத்திய அரசின் திட்டங்களை மக்களுக்கு விரிவாக எடுத்துரைக்க வேண்டும் எனவும் பாஜக நிர்வாகிகளுக்கு பிரதமர் அறிவுரை வழங்கினார்.

One response to “தமிழகத்துக்கு அதிகமான நல திட்டங்களை செய்துள்ளோம்”

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

செங்கோல் என்ன செய்யும்?

செங்கோல் என்ன செய்யும்? கொடுங்கோன்மை' என்ற சொல்லுக்கு மாற்றாக 'செங்கோன்மை' என்ற சொல்லை ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக்’காக இருந்ததை வெளிக்கொண்டு வந்துள்ளோம் புதிய பார்லிமென்டில் நிறுவப்பட உள்ள செங்கோல் பிரதமர் நரேந்திர ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட் ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட்டால் குற்றம் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தி ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தின் மனோநிலை ஆகாது நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டமன்ற   தேர்தலில் காங்கிரஸ் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை! தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை இன்று ஆளும் தி.மு.க., ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவே ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவேகானந்தரால் ஈர்க்கப்பட்டதுதான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சா, மாதா ஸ்ரீ சாரதா தேவி ...

மருத்துவ செய்திகள்

உடல் உறுப்புகளின் சீனக் கடிகாரம்

சீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் உள்ள முக்கியமான ...

கறிவேப்பிலை | கறிவேப்பிலையின் மருத்துவ குணம்

கொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி ...

சர்க்கரை நோயால் ஏற்ப்படும் பாதிப்புக்கள்

உங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். உதாரணமாக, கண்பார்வை ...