ராகுலின் நாசகார புத்தி ஏமாற்றத்தை தருகிறது

உடல்நலம் குன்றியுள்ள என்னை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தனிப்பட்ட முறையில் பார்க்க வந்து, அதை தனிப்பட்ட அரசியல் லாபத்துக்காக பயன்படுத்துவது வேதனை அளிப்பதாக கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் குற்றம்சாட்டியுள்ளார்.

ராகுல் காந்திக்கு அவர் எழுதியுள்ள கடித்ததில் கூறியுள்ளதாவது:
அன்புள்ள திரு ராகுல்,

கடும் நோயினால் அவதிப் பட்டு, தீவிர மருத்துவ சிகிச்சை மேற்கொண்டிருக்கும் கோவா முதல்வரான என்னைக் காங்கிரஸ் தலைவர் சொல்லாமல் கொள்ளாமல் நேற்று (29-01-2019) சந்திக்க வந்தது ஆறுதல் சொல்வதற்கென நினைத்தேன். அரசியலைக் கடந்து நாகரிகம் போற்றும் தன்மையினால் அதை நான் வரவேற்றேன்.

பேசியது வெறும் ஐந்து நிமிடங்கள். அதில் அரசியலோ, ரஃபேல் ஒப்பந்தம் குறித்தோ ஒரு வார்த்தை கூட நாம் பேசவில்லை. ரஃபேல் என்ற வார்த்தையைக் கூட நீங்கள் உச்சரிக்கவில்லை.

ஆனால் என்னைச் சந்தித்து வெளியேறிய பிறகு, “ரஃபேல் விமானங்களை வாங்குவதில் எனக்கு எந்தப் பங்களிப்பும் இல்லை; ரஃபேல் விவகாரத்தில் நடந்தது என்ன என்றே எனக்குத் தெரியாது” என்றெல்லாம் நான் சொன்னதாக நீங்கள் கதை கட்டிக் கொண்டிருப்பது தெரியவந்தது.

இரு நாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தமும், ரஃபேல் விமானங்கள் வாங்கியதும் நம் நாட்டு “பாதுகாப்பு வர்த்தக நடைமுறை”களின் படியே நடந்தன. தேசப் பாதுகாப்பை கவனத்தில் கொண்டும் அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றியும் தான் போர் விமானங்கள் வாங்கப்பட்டன. இது ஏற்கனவே நான் சொன்னது தான். இன்றைக்கும் இது பொருந்தும்.

அற்ப அரசியல் ஆசைகளுக்காக எனது சந்திப்பைச் செய்தி ஆக்கியதையும், அதிலும் என்னைப் பற்றிப் புளுகு மூட்டைகளை அவிழ்த்து விடும் அளவுக்கு நீங்கள் தரம் தாழ்ந்ததையும் வைத்துப் பார்க்கும்போது உங்கள் நடத்தையை, நலம் விசாரிக்க வந்த நோக்கத்தைச் சந்தேகிக்கத் தோன்றுகிறது.

நலம் பெற வேண்டும் என என்னை வாழ்த்த வந்தீர்கள் என நினைத்து ஏமாந்து போனேன். உங்கள் நாசகார புத்தி அப்போது எனக்குத் தெரிந்திருக்கவில்லை.

மிகுந்த ஏமாற்றத்துடன், இப்போதாவது உண்மையைச் சொல்வீர்கள் என்ற நம்பிக்கையில் தான் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். உங்கள் அல்பத்தனமான அரசியல் சந்தர்ப்பவாதத்திற்காக இனியாவது நோயாளிகளை நாடிப் போகாதீர்கள்!

கொள்கைப் பிடிப்பினாலும், மேற்கொண்ட பயிற்சியினாலும் உயிருக்கு ஆபத்தான நிலையிலும், எல்லா விதமான இடர்பாடுகளையும் எதிர்கொண்டு கோவா மக்களுக்குத் தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.

எம் மாநில மக்களுக்காகவும், என் தேசத்திற்காகவும் என்றென்றும் என் தொண்டு தொடரும்!

இப்படிக்கு
மனோகர் பாரிக்கர்
கோவா முதலமைச்சர்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சின்னம்மை ( நீர்க்கோளவான் )

சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ...

காரட்டின் மருத்துவ குணம்

காரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் சாப்பிட்டாலே ஒரு ...

அகத்திப் பூவின் மருத்துவக் குணம்

அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது.