காங்.,ஆட்சியில், ஊழல் செய்வதி தான் போட்டி இருந்தது

காங்.,ஆட்சியில், ஊழல் செய்வதில், அமைச்சகங்கள் இடையே போட்டி இருந்தது. ஆனால், பா.ஜ.க , ஆட்சி யில், வளர்ச்சிபணிகளில் போட்டி உள்ளது,

சர்வதேச தரவரிசை பட்டியலில், இந்தியா குறிப்பிடத் தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது. கடந்த ஓரிரு ஆண்டுகளில், உலகளவில், சுற்றுலாவில், இந்தியா மிகப் பெரிய வளர்ச்சி பெற்றுள்ளது.

 

தனிநபர்கள் இடையே, ஊழல் மற்றும் தாமதம்செய்வதில் போட்டி இருந்தது.நிலக்கரி, ஸ்பெக்ட்ரம், பாதுகாப்பு ஒப்பந்தங்களில் அதிகபணம் கிடைக்க வேண்டும் என்பதற்காக,யார் அதிகமாக, வேகமாக ஊழல்செய்வது என்ற போட்டி இருந்தது.

இதில் முக்கிய பங்காற்றியது யார் என்பது, அனைவருக்கும் தெரியும்.ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகால ஆட்சியில், வளர்ச்சிக்கான இலக்குகளை அடைவதில், போட்டி ஏற்பட்டுள்ளது.

சாலைகள் இணைப்பு,வீடுகளுக்கு எரிவாயு இணைப்பு, 100 சதவீத சுகாதாரம், 100 சதவீத மின் வசதி ஆகியவற்றை நிறைவேற்றுவதில் போட்டி உள்ளது.இலக்குகளை அடைவதிலும், வளர்ச்சி பணிகளை மேற்கொள்வதிலும், அமைச்ச கங்கள், மாநிலங்கள் இடையே, போட்டி நிலவுகிறது.

சில விஷயங்கள், இந்தியாவில் சாத்தியமற்றவை என, தொடர்ந்து சொல்லப்பட்டு வந்தது. ஆனால், 2014 முதல், இந்தியா அடைந்திருக்கும் வளர்ச்சி மூலம், 130 கோடி மக்கள் முன், சாத்திய மில்லாதது ஏதும் இல்லை, என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

ஐந்தாண்டுகளில், பொருளாதாரவளர்ச்சி, 7.4 சதவீதமாக உள்ளது. பண வீக்கம், 4.5 சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளது. கடந்த காலத்தில், தொழிற்புரட்சிக்கான வாய்ப்பை, நாம் தவறவிட்டோம். தற்போது, நான்காவது தொழிற்புரட்சியில், இந்தியாவின் பங்கு இருக்கிறது.

டில்லியில் நடந்த, சர்வதேச பொருளாதார மாநாட்டில், பிரதமர் மோடி பேசியது

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

கேள்வி கேட்டால் கோபம் வருகிறதா? ...

கேள்வி கேட்டால் கோபம் வருகிறதா? திமுக மீது அண்ணாமலை விமர்சனம் 'கடன்களை தள்ளுபடி செய்வோம் என்று பொய்யான வாக்குறுதி கொடுத்து ...

டில்லியில் அனைத்து துறை வளர்ச் ...

டில்லியில் அனைத்து துறை வளர்ச்சியையும் உறுதிபடுத்துவோம் – பிரதமர் மோடி டில்லியில் பா.ஜ., ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், 'வரலாற்று சிறப்புமிக்க ...

உத்திர பிரதேச மாநிலத்தில் பாஜக ...

உத்திர பிரதேச மாநிலத்தில் பாஜக முன்னிலை உத்தர பிரதேசத்தில் மில்கிபூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், 3ம் ...

டில்லியில் ஆட்சியை கைப்பற்றிய ...

டில்லியில் ஆட்சியை கைப்பற்றிய பாஜக டில்லி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று பா.ஜ., ஆட்சியை ...

விவசாயிகளுக்கு திமுக அளித்த வா ...

விவசாயிகளுக்கு திமுக அளித்த வாக்குறுதிகள் எங்கே போனது ? அண்ணாமலை கேள்வி வாக்குறுதியை நம்பி ஏமாந்து போன விவசாயிகளின் வயிற்றில் அடித்திருக்கிறது ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்க ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்கை விடுத்தால் நீங்கள் இருக்க மாட்டிர்கள் – அண்ணாமலை எச்சரிக்கை ''இரும்புக்கரம் கொண்டு முருக பக்தர்கள் மீது கை வைத்தால், ...

மருத்துவ செய்திகள்

காயகல்ப மூலிகைகள்

வல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, வில்வம், துளசி, ...

பேரீச்சையின் மருத்துவக் குணம்

பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ...

இரத்தபோளம் (கரியாபோளம்)

இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ...