பன்னாட்டு பண நிதியம் (IMF)

பெரும்பாலான நாடுகள், அன்னியச் செலாவணியின் மதிப்பை குறைத்தல், ஏற்றுமதி, இறக்குமதிக்கு தடை விதித்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு கடும் போட்டியில் இறங்கின. இதனால் வணிக தொடர்புகளில் சிக்கல் ஏற்பட்டு சர்வதேச வர்த்தகத்தில் பாதிப்பு ஏற்பட்டது. இது இரண்டாம் உலகப் போரின்போது உச்ச நிலையை அடைந்தது. இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் அனைவராலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய பன்னாட்டு நாணயத்தை

உருவாக்குதல், நாணய மாற்று விகிதத்தை நிலையாக நிர்ண யித்தல், உலக அளவில் நெருக்கடி ஏற்படும்போது, பாதிக்கப்படும் நாடுகளுக்கு உதவிக்கரம் நீட்டுதல் போன்ற நோக்கங்களுக்காக பன்னாட்டு பண நிதியம் 1945 டிசம்பரில் உருவாக்கப்பட்டது. இந்த நிதியம் 1947 மார்ச்சில் தனது பணிகளை தொடங்கியது. முதலில் இந்தியா உள்ளிட்ட 40 உறுப்பினர் நாடுகளுடன் தொடங்கப்பட்ட இந்த நிதியத்தில் தற்போது 187 நாடுகள் உறுப்பினராக உள்ளன.

பன்னாட்டு பண நிதியத்திற்கான மூலதனம் எவ்வாறு திரட்டப்படுகிறது?

பன்னாட்டு நிதியத்திற்கான மூலதனத்தை உறுப்பு நாடுகள் பங்குத்தொகைகளாக (கோட்டா) அளிக்கின்றன. ஒவ்வொரு நாடும் கொடுக்க வேண்டிய பங்கின் அளவு அந்நாட்டின் வருவாய், பன்னாட்டு வர்த்தகத்தில் அந்நாட்டின் பங்களிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது.

ஒவ்வொரு நாடும் அதன் பங்களிப்பில் 25 சதவீதத்தை தங்கம் மற்றும் அமெரிக்க டாலர், ïரோ, பவுண்டு யென் போன்ற செலாவணிகளில் செலுத்த வேண்டும். எஞ்சியுள்ள 75 சதவீதத்தை அந்தந்தநாட்டு செலாவணிகளில் செலுத்தலாம்.

பன்னாட்டு பண நிதியம் 880 கோடி டாலர் மூலதனத்தில் தொடங்கப்பட்டது. தற்போது இந்த மூலதனம் 76,700 கோடி டாலராக உள்ளது. மேலும் இந்த நிதியத்திடம் 2,814 டன் தங்கம் உள்ளது. இந்த தங்கத்தை இந்த நிதியம் விற்பனை செய்யலாம். எனினும் இதற்கு தங்கம் வாங்க அனுமதி இல்லை.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அரிசிப்பானையில் தேவாமிர்தம் எடுக்க கற்றுக் கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள்

அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ...

ஆவாரையின் மருத்துவ குணங்கள்

ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ...

சிறுநீரகக் கோளாறுகள்

உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ...