குடும்ப, சாதி அரசியலுக்கு பாஜக எதிரானது

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் மாநில அரசு முறையாக நடவடிக்கை எடுத்துவருவதாக பாஜகட்சியின் தேசிய பொதுசெயலாளர், முரளிதரராவ் தெரிவித்து உள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுசெயலாளர், முரளிதரராவ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர், தேசிய ஐனநாயக கூட்டணி, இந்தியாவில் மிகப் பெரிய, வலுவான கூட்டணியாக உள்ளது.கூட்டணி தொடர்பாக கேரளாவில் இடது சாரிகளும், காங்கிரசும் சண்டை போட்டுக் கொண்டு இருக்கின்றனர்.

இந்தியாவில் மற்றகூட்டணி கட்சிகளுக்கு தலைவர் இல்லை. இந்திய ஜனநாயக கூட்டணியில் மட்டுமே மோடி தலைவராக உள்ளாா். வருகிற 23, 24 ஆம் தேதிக்கு முன்னர் இந்தியாமுழுவதும் உள்ள பாஜக வேட்பாளர்கள் உறுதி செய்யப்படுவார்கள் என கூறிய அவர், தமிழகம் உட்பட தென்னிந்தியா முழுவதும் வேட்பாளர்களின் பெயர்கள் வருகிற நான்கு, ஐந்து தினங்களில் இறுதிசெய்யப்படும் என தெரிவித்தார்.

மேலும், தமிழகத்தில் பாஜக போட்டியிடும் தொகுதி மட்டுமில்லாது அனைத்து தொகுதிகளிலும் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய, மாநில தலைவர்கள் பிரசாரம்செய்வார்கள். குடும்ப, சாதி அரசியலுக்கு பாஜக எதிரானவர்கள்.

மதுரையில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு தேர்தலை தள்ளிவைக்க கேட்டுகொண்டு உள்ளதாகவும், தேர்தல் ஆணையம்தான் இதற்கு முடிவுசெய்ய வேண்டும் என கூறினார்.

பிரதமராக, மோடிதான் அதிகளவில் தமிழகத்திற்கு வந்துள்ளாா். பொள்ளாச்சி விவகாரத்தில் அரசு இதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவலியுறுத்தி உள்ளோம்.

அதிமுகவினர் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுத்து கொண்டு இருப்பதாகவும், தொடர்ந்து நடவடிக்கை எடுப்பார்கள் என கூறினார். பாஜக அமைத்துள்ள கூட்டணியில் உள்ள அதிமுக நீட்தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, ஒருகுடும்பத்திற்கு உள்ளேயே வேறு வேறு கருத்து வேறுபாடுகளுடன் இருப்பார்கள் அதே போலதான் கூட்டணி கட்சிகளும் என தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

கேள்வி கேட்டால் கோபம் வருகிறதா? ...

கேள்வி கேட்டால் கோபம் வருகிறதா? திமுக மீது அண்ணாமலை விமர்சனம் 'கடன்களை தள்ளுபடி செய்வோம் என்று பொய்யான வாக்குறுதி கொடுத்து ...

டில்லியில் அனைத்து துறை வளர்ச் ...

டில்லியில் அனைத்து துறை வளர்ச்சியையும் உறுதிபடுத்துவோம் – பிரதமர் மோடி டில்லியில் பா.ஜ., ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், 'வரலாற்று சிறப்புமிக்க ...

உத்திர பிரதேச மாநிலத்தில் பாஜக ...

உத்திர பிரதேச மாநிலத்தில் பாஜக முன்னிலை உத்தர பிரதேசத்தில் மில்கிபூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், 3ம் ...

டில்லியில் ஆட்சியை கைப்பற்றிய ...

டில்லியில் ஆட்சியை கைப்பற்றிய பாஜக டில்லி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று பா.ஜ., ஆட்சியை ...

விவசாயிகளுக்கு திமுக அளித்த வா ...

விவசாயிகளுக்கு திமுக அளித்த வாக்குறுதிகள் எங்கே போனது ? அண்ணாமலை கேள்வி வாக்குறுதியை நம்பி ஏமாந்து போன விவசாயிகளின் வயிற்றில் அடித்திருக்கிறது ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்க ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்கை விடுத்தால் நீங்கள் இருக்க மாட்டிர்கள் – அண்ணாமலை எச்சரிக்கை ''இரும்புக்கரம் கொண்டு முருக பக்தர்கள் மீது கை வைத்தால், ...

மருத்துவ செய்திகள்

சங்கிலையின் மருத்துவக் குணம்

சங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் 20 ...

ஆரைக்கீரை தரும் மருத்துவக் குணங்கள்

நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ...

வெள்ளைப்பாடு நிற்பதற்கான வழிமுறைகள்

சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ...